Skip to main content

கள்ளக்குறிச்சி: கள்ள விற்பனைக்கு பதுக்கப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
Liquor captured

 

 

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சந்தையில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தநாடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேஷ் மற்றும் பழனிமலை ஆகியோரின் வீட்டில் அட்டை பெட்டிக்குள் மற்றும் சாக்கு மூட்டைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஆயிரம் மதுபாட்டில்கள் 110 பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக கிராமப்புறங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் சாகுல் கதைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர கள்ளமது வேட்டையில் ஈடுபட்ட போது சேந்தநாடு கிராமத்தில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

 

போலீசாரை கண்டதும் மகேஷ் பழனிமலை ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முழுநேர ஊரடங்கினை முன்னிட்டு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து அதைபதுக்கி வைத்து நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு கிராமப்புறங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

 

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மது பாட்டில்களையும் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகாவிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையிலான போலீசார் வெள்ளையூர் அங்கனூர் சின்னகுப்பம் உட்பட பல்வேறு கிராமங்களில் தீவிர கள்ள மது வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்து வந்த கோபிநாத் ஆறுமுகம் பெருமாள் ரவி பிரபு ஆகியோரை கைது செய்துள்ளனர் அவர்களிடமிருந்து 30க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 

டாஸ்மாக் கடைகளிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று கிராமப்புறங்களில் அதிக விலைக்கு விற்று, லாபம் பார்க்கும் கள்ள மார்க்கெட் வியாபாரிகள் உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிகரித்துள்ளனர். காவல்துறை அவ்வப்போது ரெய்டு செய்து கள்ள மது விற்கும் பேர்வழிகளை மது பாட்டில்களுடன் கைதுசெய்தும் கூட மீண்டும், மீண்டும் கள்ள மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.