Skip to main content

நக்கீரனால் காப்பாற்றப்பட்ட நாவல் மரங்கள்... இன்று வயது முதிர்வால் பட்டுப்போய் நிற்கிறது...

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

jamun fruit trees preserved by nakkheeran; people thanked

 

2009 டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் நக்கீரன் முயற்சியால் காப்பாற்றப்பட்ட பழமையான நாவல் மரக் கூட்டங்கள், இன்று வயது முதிர்வால் ஒவ்வொன்றாக பட்டுபோய்க்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமம் ஆவணத்தான்கோட்டை. அந்த ஊரையடுத்து 6 கி.மீ தூரத்தில் சாலையோரத்தில் உள்ளது ‘காயாங்குளம்’. குளத்தின் கரைகள் மட்டுமின்றி குளத்திற்குள்ளும் 50க்கும் மேற்பட்ட நாவல் மரங்கள் நூறாண்டுகளை கடந்தும் கூட்டமாக இருந்தன.

 

இதில் 2009ஆம் ஆண்டு 37 மரங்கள் உயிரோடு இருந்தது. அந்த மரங்களை வெட்டி பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு கொடுக்க முடிவெடுத்து ஊராட்சி தீ்ர்மானம் நிறைவேற்றி ஊராட்சி ஒன்றியம் வழியாக வனத்துறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அத்தனையும் பட்ட மரங்கள் என்றும் அவற்றை வெட்டலாம் என்றும் அனுமதியளித்து நன்கு வளர்ந்த 37 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது. எண்களும் போடப்பட்ட நிலையில்தான் "அந்த மர உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்று வனத்துறைக்குள் இருந்து நல்ல உள்ளம் கொண்ட ஒரு வனத்துறை ஊழியர் நம்மிடம் கேட்டுக்கொண்டார்.

 

jamun fruit trees preserved by nakkheeran; people thanked

 

அவரது கோரிக்கையோடு காயாங்குளம் சென்று பார்த்த பிறகு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ரீட்டா ஹாரீஸ் தாக்கர், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ரகுபதி (தற்போதைய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்), அப்போதைய மாநில வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உயிருள்ள மரங்களை வெட்டமாட்டோம் என்று உறுதியளித்தனர். அதன் பிறகு அந்த நாவல் மரக்கூட்டங்கள் காப்பாற்றப்பட்டன. இந்த தகவல் அறிந்து, நம் கவனத்திற்கு கொண்டு வந்த வனத்துறை ஊழியரும் ஆவணத்தான்கோட்டை கிராமத்தினர் பலரும் நக்கீரனுக்கு நன்றி கூறினார்கள்.

 

11 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனால் காப்பாற்றப்பட்ட 37 நாவல் மரங்களில் பல மரங்கள் வயது முதிர்வால் பட்டுப்போய் நிற்கிறது. இதனைப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளது. ஆவணத்தான்கோட்டை பகுதி இளைஞர்கள் கூறும்போது, “பள்ளி மாணவர்கள் முதல் இளைப்பாறும் வழிப்போக்கர்கள் வரை பழம் கொடுத்த நாவல் மரங்களை மொத்தமாக அழிக்க நினைத்தபோது அன்று நக்கீரனால் காப்பாற்றப்பட்டதால், இன்று பல மரங்கள் பட்டாலும் ஏராளமான மரங்கள் உயிரோடுதான் நிற்கிறது. இந்த மரங்கள் உயிரோடு நிற்பதால்தான் குளத்தில் பாதிவரை ஆக்கிரமித்தவர்கள் மீதியை ஆக்கிரமிக்க முடியாமல் பாதி குளமும் காப்பாற்றப்பட்டிருக்கிறது” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.