Skip to main content

கருப்பு கொடிக்கு அனுமதி வேண்டும் - திமுக : கைது செய்வோம் - போலீஸ்

Published on 17/07/2018 | Edited on 17/07/2018


 

    தமிழகத்தின் தூய்மையான நகராட்சிகளில் முதன்மையான நகராட்சியான புதுக்கோட்டைக்கு 20ந் தேதி காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து தூய்மை இந்தியா திட்டத்தை பார்க்கிறார். அடுத்து சித்தன்னவாசல் சென்று பிறகு மதியம் பொதுமக்களிடம் மனு வாங்குகிறார். இப்படி ஒரு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்று தி.மு.க. திங்கள்கிழமையே மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டுவிட்டனர்.
 

 

 

    இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை தி.மு.க மாவட்ட பொருப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ, செல்லப்பாண்டியன் ஆகியோர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட அனுமதி வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் அப்போதே அனுமதி கிடைக்காது என்று போலிசார் கூறிவிட்டனர். அதன் பிறகு ஆளுநர் வருகையையொட்டி பாதுகாப்பு எற்பாடுகளை கவணிக்க புதுக்கோட்டை வந்த திருச்சி டி.ஐ.ஜி.லலிதா லெட்சுமி ஆய்வுக்கு பிறகு எஸ்.பி. அவுலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது காலையில் மனு கொடுத்த தி.மு.க பிரமுகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அழைக்கப்பட்டனர்.
 

    தி.மு.க மாவட்ட பொருப்பாளர்கள் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ, கே.கே.செல்லப்பாண்டியன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு. மற்றும் உ்.பி.க்கள் எஸ்.பி அலுவலகத்தில் டி.ஐ.ஜி யை சந்தித்து கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டனர். கருப்புக் கொடி காட்ட அனுமதி இல்லை. மேலும் அப்படி முயன்றால் கைது, சிறை, பிணை கிடைக்காத பிரிவுகளில் வழக்கு பதிவு இருக்கும் என்று கூறிவிட்டார். அதனால் போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம் என்று சொல்ல மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டு்ள்ள இடங்களின் வழியாக ஆளநர் வரவில்லை அதனால் அவர் செல்லும் வழியில் ஒரு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்றனர். அப்படி ஒதுக்க முடியாது. நாமக்கல் பிரச்சணைக்கு பிறகு அரசாரண கடுமையாக உள்ளது. அதன்படி முன்னதாக வும் கைது செய்ய வாய்ப்புகள் உள்ளது என்ற டி.ஐ.ஜி கூறிவிட்டார். ஆனால் கைது, சிறை எதுவானாலும் சரி மாநில சுயாட்சிக்கு எதிராக ஆயுவு செய்ய வரும் ஆளுநருக்கு தி.மு.க கருப்பு கொடி காட்டுவது உறுதி சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறிவிட்டு வெளியே சென்றனர்.
 

 

 

    அதன் பிறகு தி.மு.க கருப்பு கொடி காட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றிய ஆலோசனை காவல் துறையினர் மத்தியில் நடந்துள்ளது. 
 

    வெளியே வந்த தி.மு.க வினர்.. கருப்பு கொடி காட்ட முறையாக அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி இல்லை என்று வாய்மொழியாக சொன்னார்கள். எங்கள் மனுவுக்கு எழுத்துபூர்வமாக பதில் கொடுத்தால் நீதிமன்றத்தில் கூட அனுமதி வாங்க முடிவு செய்துள்ளோம். ஆனால் நாமக்கல் பிரச்சணைக்கு பிறகு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறுகிறார்கள். எப்படியானாலும் தி.மு.க கருப்பு கொடி காட்டுவது உறுதி. எத்தனை பேரை கைது செய்தாலும் செய்யட்டும் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். மேலும்.. லண்டனில் இருந்து செயல் தலைவர் வந்த பிறகு எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறாரோ அதுபடி புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க செயல்படும் என்றனர்.

 
ஆளுநர் வருகைக்கு முன்பே தி.மு.க வின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருக்கலாம்.
 

 


            
 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.