Skip to main content

நெடுவாசலில் கருப்பு தினம் அனுசரிப்பு!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி மாலை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 16 ந் தேதி காலை நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். அடுத்தடுத்த நாட்களில் நெடுவாசல் சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சோந்த சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக் களம் நோக்கி வந்தனர். விவசாயிகளும், இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு வருவதைக் கண்ட அரசியல் கட்சிகளும், திரைத்துறையினரும் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டக் களம் நோக்கி வந்து ஆதரவாக பேசினார்கள். 

 

 Black day on neduvasal

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு பறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினார்கள். இப்படி 196 நாட்கள் வரை நெடுவாசல் போராட்டம் நடந்தது. அதே போல வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களிலும் பல நாட்கள் போராட்டங்கள் நடந்தது. நெடுவாசலுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களுக்கு வழக்கு போடமாட்டாம் என்று சொன்ன காவல் துறை ஒரு வருடத்திற்கு பிறகு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பியது.

 

 

ஆனாலும் மத்திய மாநில அரசுகள் திட்டம் வராது என்று வாய்மொழியாக சொன்னாலும் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ மசோதா தாக்கல் செல்லவில்லை. கடந்த ஆண்டு நெடுவாசலுக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை அதனால் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஜெம் நிறுவனம் கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவு பெற்று நெடுவாசலுக்கு செல்வோம் என்பது போல கூறியுள்ளது. இதனால் நெடுவாசல் மக்கள் மேலும் கொதித்துப் போய் உள்ளனர். 

 

இந்த நிலையில் கஜா புயலும் அடியோடு புரட்டிப் போட்டுவிட்டு போய்விட்டது. இப்படி விவசாயிகள் மீது அடிமேல் அடி விழுவதால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர். வெளிநாடுகளில் வேலைக்கு சென்றுள்ள இளைஞர்கள் மீண்டும் விவசாயம் செய்ய சொந்த ஊர்களுக்கு வருகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கஜா புயல் தாக்கி விவசாயத்தை அழித்துவிட்டதால் அந்த எண்ணத்தை தற்காலிகமாக தள்ளிப் போட்டுள்ளனர்.

இந்தநிலையில் நெடுவாசல் போராட்டம் தொடங்கி 2 வருடம் முடீந்து 3 வது வருடம் தொடங்கும் நாளான பிப்ரவரி 16 ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்தனர் நெடுவாசல் மக்கள். நாடியம்மன் கோயில் திடலில் திரண்ட இளைஞர்கள் சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்! என்று முழக்கமிட்டனர். 

 Black day on neduvasal

 

போராட்டத்தின் தொடக்கத்தில் வெடிகுண்டுக்கு பலியான ராணுவ வீர்ர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள். 

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தங்க கண்ணன்.. விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து விவசாயிகளை வெளியேற்ற திட்டமிட்டு ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தொடக்கத்திலேயே விவசாயிகள் வலுவாக எதிர்த்து போராடியதால் மத்திய, மாநில அரசுகள் சற்று பின்வாங்கியது. திட்டம் வராது என்று வாய்மொழியாக சொன்னார்கள். சொன்ன பிறகு ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து போட்டார்கள். அதனால் மறு போராட்டம் வெடித்தது. இப்படி மக்களை தினமும் போராட்டக் களத்திலேயே வைத்துக் கொண்டு அவர்களின் அன்றாட பணிகளை செய்யவிடாமல் செய்தனர். அதனால் காந்தி பிறந்த நாளில் அகிம்சை போராட்டத்தை தறகாலிகமாக கைவிட்டோம். ஆனால் எப்போது ஊருக்குள் நுழைய முயன்றாலும் உக்கிரமான போராட்டம் நடக்கும் என்பதையும் தெளிவு செய்துவிட்டோம்.   ஆனாலும் எங்கள் நிம்மதியை கெடுத்த இந்த நாளை எப்போதும் மறக்க மாட்டோம். அதனால் தான் பிப்ரவரி 16 ந் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது