Skip to main content

பாஜகவின் கோவில் அரசியல்... குட்டு வைத்த நீதிமன்றம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

BJP's temple politics...  court!

 

குமரி மாவட்டம் வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலில் ஜூன் 11ஆம் தேதி  நடந்த தேரோட்டத்தின்போது இந்து மதம் நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடத்தைப் பிடித்து இழுக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை மீறியும் அவர் தேரின் வடம் பிடித்து இழுத்தார். அதேபோல் ஜூன் 14-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை தொடக்க விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொள்வதற்கும் பாஜகவினர் எதிர்ப்பு காட்டியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சியில் மனோதங்கராஜ் கலந்து கொள்ளாமல் அவருக்கு பதில் இந்து மதத்தை சேர்ந்த நாகர்கோவில் மேயர் மகேஷ் அதில் கலந்து கொண்டார்.

 

இந்தநிலையில்தான் தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வருகிற 6-ம் தேதி நடக்க இருக்கிறது. அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கும்பாபிஷேக அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜின் பெயர் இடம் பெற்றிருந்ததால் பாஜகவினருக்கு அது உஷ்ணத்தை ஏற்றியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

mm

 

மேலும் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன், இந்துக்கள் அல்லாதவர்கள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் கும்பாபிஷேகத்திற்காக பக்தர்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் விழாக்களில் கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு தான் பங்கேற்க வேண்டும். அரசு விழாவாக நடைபெறும் போது இந்துக்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ளும் போது சம்பிரதாயங்கள் கடைபிடிக்காமல் கோவிலின் புனிதம் கெட வாய்ப்புள்ளது. எனவே இந்துக்கள் அல்லாதவரை நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவை விசாரித்து நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் கும்பாபிஷேகம் விழாக்களில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும்போது அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினையை வழிவகுக்கும்.

 

எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை பரந்த மனபான்மையில் அணுக வேண்டும் என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இது பாஜகவினருக்கு பலத்த எதிரடியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மனோ தங்கராஜ் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு போலி ஆன்மீகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு கிடைத்த செருப்படி என்றிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.