Skip to main content

'பாஜக தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது; நடவடிக்கை எடுப்பேன்'- அண்ணாமலை பேட்டி

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

'BJP workers should not take the law into their hands; I will take action'- Annamalai interview


மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திடீரென அமித்ஷா வந்திருந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் அங்கிருந்த பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தொண்டர்கள் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர ஓட்டிகளை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் கரு.நாகராஜன், ''மத்திய அமைச்சருக்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்களை எல்லாம் எதிர்க்கக்கூடிய மாவீரன் அமித்ஷா. தமிழக மண்ணில் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுகிறது. என்.ஐ.ஏ நாடு முழுவதும் நூறு பேரை கைது செய்தால் அதில் 40 பேர் தமிழகத்தில் கைது செய்யும் நிலைமையில் தான் தமிழகம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது உச்சகட்ட பாதுகாப்பு உடைய தலைவர் வரும்போது மின்சார வயரை துண்டிக்கிறார்களோ அல்லது மின் இணைப்பை துண்டிக்கிறார்களோ தெரியாது அவர் வருகின்ற பொழுது இங்க இருக்கக்கூடிய அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இருட்டான நிலையை இந்த மவுண்ட் ரோட்டுக்கு ஏற்படுத்தலாமா? அவர் இருட்டில் இறங்கி நடந்து செல்கிறார். இருட்டைக் கண்டு பயந்து ஓடுவேன் என்று அவர் ஓடவில்லை. கைது செய்ய வரும் பொழுது ஐயோ ஐயோ என்று கத்தும் தலைவர் அல்ல அவர். இது மிகப்பெரிய தவறு தமிழக அரசை கண்டிக்கிறோம்'' என்றார்.

 

'BJP workers should not take the law into their hands; I will take action'- Annamalai interview

 

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நம்முடைய அரசு மற்றும் அரசு துறைகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அரசு துறைகளை பொறுத்தவரை மிக நேர்த்தியாக செயல்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சில இடங்களில் நம்மையும் தாண்டி இதுபோன்ற பவர் கட் நடக்கிறது. அது எதிர்பாராத விதமாக அமைச்சர் வரும் பொழுது சரியாக காரில் இருந்து இறங்கி நமது தொண்டர்களை பார்த்து நடந்து வரும் பொழுது நடந்து விட்டது. என்னுடைய அன்பான வேண்டுகோள் எல்லாத்தையும் நாம் அரசியல் பண்ணக்கூடாது. இதில் நம் தமிழ்நாட்டினுடைய கௌரவம் இருக்கிறது. நம்முடைய கௌரவத்தை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. டிஎன்இபி முறையாக பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில் நமது தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. தவறு நடந்தால் அதற்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதிகாரிகள் செயல்படுத்துவார்கள். பழுது இருந்தால் நீக்குவார்கள். தவறு இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்கள் மீது கை வைப்பது, அவர்களிடம் சண்டைக்கு செல்வது, பவர் கட் வந்ததற்கு பொதுமக்களை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு. கண்டிப்பாக நாங்கள் ஆக்சன் எடுப்போம். இப்பொழுதுதான் இது எங்களுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரமாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்ப பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.