Skip to main content

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

BJP workers protest to reduce taxes on petrol and diesel

 

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என்று சமீபத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,  ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (22/11/2021)வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி தி.மு.க. அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பொது செயலாளர் குணசேகரன், பொருளாளர் தீபக்ராஜா, இளைஞர் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், மகளிர் அணி  மாவட்ட தலைவர்கள் புனிதம்,கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

"ஏறிப்போச்சு... ஏறிப்போச்சு...பெட்ரோல்... டீசல் ஏறிப்போச்சு...தி.மு.க. அரசே, ஸ்டாலின் அரசே விலையைக் குறை.. விலையைக் குறை... வாட் வரியை குறைத்து விலையைக் குறை..." என சிறிது நேரம் கோஷம் போட்டுவிட்டு கலையத் தொடங்கினார்கள்.

 

அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் பா.ஜ.க.மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் "ஏங்க பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை தினமும் நிர்ணயம் செய்வது உங்க மத்திய அரசு அனுமதித்துள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விலை ஏறாமல் தடுத்து விலை குறைப்பைச் செய்ய வேண்டியது மத்திய பா.ஜ.க. அரசின் கையில் தானே இருக்கிறது. 

 

வரி என்பது எல்லா பொருளுக்கும் உள்ளது. அது மாநில அரசின் வருவாய் சம்பந்தப்பட்டது. வாட் வரியும் அப்படித்தான், இப்படி இருக்க விலையை குறைக்காமல் வரியை குறைக்க வேண்டும் என்பது என்ன அரசியல் போராட்டம் எதுவும் புரியவில்லையே என கேள்வி எழுப்பியதற்கு தான் முதல் வரியில் உள்ள பதிலை அந்த பா.ஜ.க. நிர்வாகி சொல்லிச் சிரித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.