Skip to main content

அதிமுகவின் அடையாளத்தை 'கபளீகரம்' செய்த பாஜக!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

The BJP, which has embraced the AIADMK identity

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது ஆளும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கும் தான். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூன்ஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க மற்றுமுள்ள கட்சிகள் அவர்கள் போட்டியிடாத இடங்களிலும் தங்களின் கொடி மற்றும் கரைவேட்டி, துண்டு போன்ற அடையாளத்துடன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார்கள், களப்பணியாற்றுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அங்கு தேர்தல் பணியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரின் சுய அடையாளத்தைக் காட்டாமல் அவர்களுக்கும் காவி உடை அணிய வைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களைக் காவிப் படையாக மாற்றிவிட்டது. பா.ஜ.க. 

 

குறிப்பாக மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் அரவக்குறிச்சி, தாராபுரம், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியைத் தவிர பா.ஜ.க.வுக்கு தொண்டர்களோ, அமைப்பு பலமோ மற்ற மூன்று தொகுதிகளிலும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர் தான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்கிறார்கள். இதில் தான் பா.ஜ.க.வின் சூது வெளிப்படையாகத் தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத (தற்போது சீட் கிடைக்காத) சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் வேதனையுடன் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

"கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த நான்கு தொகுதிகளிலும் பா.ஜ.க தனியாக நின்றால் ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டாயிரம், ஐயாயிரம் அதிகபட்சம் பத்தாயிரம் வாக்குகளைத் தான் அவர்களால் பெறமுடியும். ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் ஒட்டு வங்கியான 30 சதவீதத்தை அப்படியே பெறப் போகிறார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.கவினர் பா.ஜ.க.வுக்காக களப் பணியாற்றுகிறார்கள். எங்களது ஊராட்சி கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், நாங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பூத் கமிட்டியினர், அதாவது ஒரு பூத்துக்கு ஆண்கள் 25, பெண்கள் 25 பேர் என எல்லோரையும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் முதல் பதவி பொறுப்புக்குத் தகுந்தாற்போல் சிலருக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் வரை வேட்பு மனுத் தாக்கலுக்கு அடுத்த நாளே பா.ஜ.க.வினர் வாரி வழங்கி விட்டனர். அது தவிர ஒவ்வொரு நாளும் செலவுக்குத் தனியாக தந்து விடுகிறார்கள். இதுதவிர ஒரு ஒட்டுக்கு தலா இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை தாராளமாகக் கொடுக்கிறார்கள். பா.ஜ.க தொகுதிகளுக்கு பலகோடி ரூபாய் கர்நாடகாவிலிருந்து தான் இறக்குமதியானது. இப்படியெல்லாம் கொடுத்து எங்க நிர்வாகிகள், தொண்டர்களை பணத்தால் மயக்கி மக்களிடம் எப்படி ஒட்டு கேட்க வைத்திருக்கிறார்கள் பாருங்கள்? அதாவது நம்ம ரெட்டை இலை சின்னம் தான் இப்ப தாமரை... இனி தாமரை தான் நம்ம சின்னம். ரெட்டை இலைக்கு பதிலா தாமரை தான் எனப் பிரச்சாரம் செய்ய வைத்திருக்காங்க. கூட்டணிக் கட்சி சின்னம்னு எங்கேயும் சொல்றதில்லே. மொடக்குறிச்சியில பூந்துறையில இருக்குற தலித் காலனியில ஒட்டுக் கேட்கும்போது ஒரு மூதாட்டி ஏப்பா எம்.ஜி.ஆரு, ஜெயலலிதாம்மா சின்னம் தானே ரெட்டை இலை அது இல்லையானு கேட்டது, அதுக்கு எங்க ஆளுக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா சின்னமான ரெட்டை இலை தான் இப்போ தாமரை சின்னம்னு அந்தம்மாவுக்கு புரிய வெச்சாங்க. சரி பா.ஜ.க. ஓட்டு வாங்கறதுக்குத்தான் இப்படியெல்லாம் பேச வைக்குதுனு ஒதுங்க முடியலே.

 

The BJP, which has embraced the AIADMK identity

 

காரணம் எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோருக்குமே காவித் துண்டு போட்டு விட்டார்கள். கருப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை என்ற கரை போட்ட துண்டுகள் யார் கழுத்திலும் இல்லை. சிலர் வேட்டியே காவி கலர்லே தான் கட்டிகிட்டு வர்றாங்க அந்த அளவுக்கு பணம் கொடுத்து மூலை சலவை செய்திட்டாங்க. ஓட்டுக் கேட்க போகும் போது அ.தி.மு.க. அடையாளமான துண்டு அணியாமல் காவித் துண்டு போடுவது வேதனையளிக்கிறது. பாருங்க தாராபுரத்துல பிரதமர் மோடி கலந்துகிட்ட கூட்டத்துல கூட முதல்வர், துணை முதல்வர் கலந்து கிட்டாங்க, அனா அதுல கூட அ.தி.மு.க.அடையாளம் இல்லாமல் எல்லாமே காவி மயமாகத்தான் இருந்தது. 

 

இவுங்க தேர்தலே ஜெயிக்கறாங்களோ, தோக்கறாங்களோ.. ஒன்னுல உறுதியா ஜெயிச்சுட்டாங்க அ.தி.மு.க. நிர்வாகிகள், அடிமட்ட தொண்டன், வாக்காளர்கள் வரை எல்லோரையும் காவி மயமாக்கிவிட்டனர். இவர்கள் போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமைப்பு பா.ஜ.க.வுக்குள் கலந்துவிட்டது. இது ஒன்னரை கோடி தொண்டன் உள்ள அ.தி.மு.க.வுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது" எனப் பரிதாபமாகக் கூறினார். 

 

வெற்றி, தோல்வி ஒரு புறம் இருந்தாலும் காவியும், தாமரையும் கிராமங்கள் தோறும் கொண்டு சென்றதும் அ.தி.மு.க.வினர் பலரை பா.ஜ.க. சிந்தனைக்குக் கொண்டுவந்து இந்த தேர்தல் மூலம் அமைப்பு ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க. என்பதை மறுப்பதற்கில்லை. இதுகுறித்து பாஜகவினருடன் சென்ற அதிமுக தொண்டர்களிடம் கேட்டபோது, ''இப்படிப்  எங்களை குறைசொல்லும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என்றால் தோப்பு வெங்கடாச்சலம் மாதிரி முடிவெடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிட வேண்டும் என போராடி கட்சித் தலைமையிடம் வாங்கியிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டார்கள். இப்பொது எங்களைக் குறை சொல்லுகிறார்கள். தேர்தல் பணிகளைக் கவனிக்க கட்சி மேலிடம் எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்குக் கொடுக்குமாறு ஒரு தொகையைக் கொடுத்தது. அதனை அதிமுக போட்டியிடாத தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்ஏக்களும், எம்.பிக்களும் எங்கள் கண்ணில் காட்டவில்லை. பஸ் செலவுக்கோ, பைக்கிற்கு பெட்ரோல் போடவோ, டீ செலவுக்கோ, சாப்பாடு செலவுக்கோ காசு வேண்டுமா வேண்டாமா? எங்களைக் குறைசொல்லும் நிர்வாகிகள், அவர்களே முன்னின்று பிரச்சாரத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டியதுதானே. அப்படி எங்களை அழைத்துச் சென்றிருந்தால், இப்படி அவர்கள் புலம்பத் தேவையில்லை. நாங்கள் தொண்டர்கள். எப்பொழுதும் எம்.ஜி.ஆர் விசுவாசியாக, ஜெயலலிதா விசுவாசியாக இருப்போம். எங்களைக் குறைசொல்லும் மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு மாறாமல் இருந்தால் சரி'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.