Skip to main content

ரஜினியை எம்.ஜி.ஆர் முகமாக மாற்ற துடிக்கிறது பாஜக - காங்கிரஸ் சிறுபான்மை காட்டம்!!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019


தமிழகம்மே குடிக்க தண்ணீரில்லாமல் தவிக்கிறது. இதனை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. வேலூர் மாவட்ட மக்கள் பகல், இரவு என தினம் தினம் மாவட்டத்தின் பலயிடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் தமிழக துணை தலைவர் அஸ்லம்பாஷா. 

 

BJP tyirng to change the face of Rajinikanth like MGR -congress minority  Structure


இதுப்பற்றி அவர் பேசும்போது, எடப்பாடி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் குடிநீர் மேளாண்மையை உள்ளாட்சி நிர்வாகமே செய்திருக்கும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை, மாறாக குடிமரமாத்து பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொள்ளை போகிறது. அதில் கமிஷன் வாங்கிப்பழகிய எடப்பாடி அரசு உள்ளாட்சித்தேர்தலை நடத்த மறுக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மத்திய அரசின் புதிய கார்பரேட் கொள்கைப்படி பொதுவினியோகத்துறையை இழுத்து மூட மத்திய அரசின் நிர்பந்தந்திற்கு அடிபணிய அதிமுக அரசு தாயாராகிறது. தமிழகத்தில் எடப்பாடி அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் உரிமை மாத்திரமல்ல வளங்களும் கொள்ளை போகும்.

 

நிதிஆயோக் கூட்டத்திற்கு சென்ற எடப்பாடி எட்டுவழிச்சாலையை பற்றி மட்டுமே பேசுகிறார். காவிரி உரிமை பேசவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு காவடி தூக்குகிறார். எதில் எல்லாம் கமிசன் வருமோ அந்த திட்டாங்களாக பார்த்து மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். ஆகவே எடப்பாடி அரசு நீடிப்பது தமிழகத்தை பாலைவனமாக்கும். பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் மூலம் இந்த அரசை உடனடியாக நீக்க வேண்டும்.

 

மத்திய அரசு தமிழத்திற்கு தரவேண்டிய நிதியை தரமறுக்கிறது. தமிழக அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி எடப்பாடி அரசை மிரட்டி அதிமுக விற்கு புதிய தலைமை உருவாக்க முயற்சிக்கிறது. ரஜினியை எம்ஜிஆர் முகமாக அதிமுகவில் திணிக்க எல்லா முயற்சிகளையும் பாஜக எடுக்கிறது. அதன் ஒருபகுதி தான் பாட புத்தகத்தில் ரஜினி இடம்பெற்று இருப்பது. தண்ணீர் பஞ்சம் உணவுப்பஞ்சம், இயற்கை வளங்களை பாதிக்கும் நாசகரத் திட்டங்கள் என தமிழகத்தின் மீது தினித்து மக்கள் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லை  அந்த இடத்திற்கு ரஜினி தகுதியானவர் என்னும் திட்டத்தையும் எடப்பாடியை வைத்தே மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிடுகிறது. அதனால் இதனை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.