ஆட்சி பீடத்தில்டெல்லி மக்கள் தாமரையை வைக்காமல்துடைப்பத்தைவைத்துள்ளனர் எனதமிழகபாஜக மூத்ததலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

BJP TAMILNADU ILA.GANESAN

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றடெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கானவாக்கு எண்ணிக்கை 21 மையங்களில்இன்று காலை8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும்நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது.12.09மணி நிலவரப்படிஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும்,பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி53.6 சதவீதவாக்குகளும்,பாஜக39.31சதவீதவாக்குகளும், காங்கிரஸ் 4.10 சதவீதவாக்குகளும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவரும்,தமிழகபாஜகமூத்ததலைவருமானஇல.கணேசன் கூறியுள்ளதாவது, ராஜ்ஜியலஷ்மிஎன்று கூறப்படும் ஆட்சி பீடத்தில்டெல்லி மக்கள் தாமரையைவைக்காமல்துடைப்பத்தைவைத்துள்ளனர். இது பாஜகவிற்கு பின்னடைவு என்று சொல்லமுடியாது.கடந்ததேர்தலோடுஒப்பிட்டு பார்க்க வேண்டும். கெஜ்ரிவால் அறிவித்த இலவசதேர்தல் திட்டங்களுக்கும் பாஜகஅறிவித்த தேர்தல் திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளதுஎன்றார்.