Skip to main content

திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர்! (படங்கள்)

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை தங்குதடையின்றி திறந்துவைத்து மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்த ஆன்மீக விரோத திமுக அரசு, கரோனா பரவலைக் காரணம் காட்டி, வார விடுமுறை நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது என தமிழ்நாடு பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

 

மேலும், இந்த ஆன்மீக விரோதப் போக்கினை வன்மையாக கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வழிபாட்டு தலங்களிலும் அக்டோபர் 7ஆம் தேதியான இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்ற  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் K. அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திமுக அரசை எதிர்த்து கண்டன உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியினை மாநில பாஜக இளைஞரணி தலைவர், வினோஜ் பி. செல்வம் ஒருங்கிணைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி காலமானார்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Former Minister Indira Kumari passed away

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திராகுமாரி. இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுக கட்சியில் அவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி இன்று (15-04-24) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திராகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.