Skip to main content

அவதூறு பரப்பிய பாஜக மாநிலச் செயலாளருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

BJP state secretary who spread defamation ordered to stay in Chidambaram and sign

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர் மற்றும் தரிசன விழாவின்போது தமிழக அரசின் அரசாணையை மீறி கோவில் தீட்சிதர்கள் கனக சபையில் பக்தர்கள் ஏறி வழிபடத் தடை விதித்து பதாகை வைத்தனர். இதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறையினரைக் கோவில் தீட்சிதர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்பில் அந்தப் பதாகை அகற்றப்பட்டது. பின்னர் ஜூன் 24 ஆம் தேதி மாலை கனக சபையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனக் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில் தீட்சிதர்களிடம் வலியுறுத்தியபோது அவர்கள் அனுமதிக்க முடியாது எனப் பிடிவாதமாக இருந்தனர்.

 

இந்நிலையில் கனகசபையின் கிழக்கு வாயில் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் காவல்துறை பாதுகாப்புடன் தரிசனம் செய்துவிட்டு கீழே வந்தனர். இதற்குத் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூச்சலிட்டனர். மேலும் தீட்சிதர் பூணூலை அறுத்ததாகவும் தாக்கியதாகவும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினார்கள்.

 

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா என்பவர் கோவில் தீட்சிதர்களைக் காவல்துறையினர் தாக்கியதாகப் போலியான செய்தியைச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.  இது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் காவல்துறையினர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.

 

இதற்குப் பயந்து தலைமறைவாக இருந்த பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இதில் மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே  சு. வெங்கடேசன் எம்பி மீது அவதூறு பரப்பிய வழக்கில் கையெழுத்திட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.