இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இல.கணேசன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.