பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி சென்னை பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய அரசு, தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டு வர உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்திய சாதனைகளை இந்த ஓராண்டில் எடுத்துச் சொல்வோம்

பாஜக ஆட்சியை பற்றி நேர்மறையான தகவலை விட, அதிகமாக எதிர்மறையான தகவல்கள் வேகமாக பரப்பப்பட்டுகின்றன. எனினும், இந்த எதிர்மறை பிரசாரத்தை முறியடித்து மத்தியில் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றார்.

.

படங்கள்: அசோக்குமார்

again rule Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe