Skip to main content

பா.ஜ.க. ஆட்சியின் நயவஞ்சக அரசியல்!  -விளாத்திகுளம் உமாமகேஸ்வரி தடாலடி!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
rl

 

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் நிலைப்பாடு குறித்து,  ‘பேரமெல்லாம் நடக்கிறது’ என்று தகவல்கள் வெடித்துக் கிளம்பும் நிலையில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரி, தன்னுடைய கணவர் ரகுபதியின் முகநூல் பக்கத்தில் ‘துரோக ஆட்சி’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கருத்தைப்  பதிவிட்டிருக்கிறார். 
இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்களுக்கான ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக அம்மா அவர்களின் பேரன்பினால் மக்கள் பணியாற்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராகும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன்.


அம்மாவின் 30 ஆண்டுகால உறவாகவும் அஇஅதிமுகவின் நீண்டகால வரலாற்றில் அம்மா அவர்களோடு இணைந்து ஈடு இணையற்ற தியாகப்பணியைத் தொடர்ந்ததாலும் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் தலைமையில் கட்சிப் பணியாற்றுவதும், அம்மாவின் ஆட்சி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்வதும் தான் சரியானது என முடிவெடுத்தேன். துரோக ஆட்சியில் இருந்திருப்பேனேயானால் மக்கள் பணியை சிறப்பாக ஆற்ற முடியாது என ராஜினாமா செய்திருப்பேன். இதயதெய்வம் அம்மாவின் நல்லாட்சி அமைந்திட ஆட்சி தலைமை மாற்றம் ஏற்படுவதே சரியாக இருக்கும். துரோகிகளின் நயவஞ்சக தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக மனுவை வாபஸ் பெருவதன் மூலம் இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை. 18 பேருமே வாபஸ் பெற்றாலும் கூட தேர்தல் நடத்த முற்றுப்பெறாத தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் கருதவில்லை. பெரும்பான்மையில்லாத ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும், அப்போது இடைத்தேர்தல்களை நடத்த மத்திய அரசு திட்டமிடுவதாகவுமே அரசியல் செய்வதாக யூகிக்கிறேன்.

 

அம்மா அவர்களின் ஆசியுடன் சட்டபடி வெற்றியை பெருவோம் ஜனநாயகத்தில் சட்டம் தவறாகும் பட்சத்தில் கழகத்தின் தியாக வீரர்களுடன் மக்கள் பேராதரவுடன் வென்றெடுப்போம். 

இவ்வாறு கூறியிருக்கிறார் உமாமகேஸ்வரி. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.