Skip to main content

நான்கு இடங்களில் பிரம்மாண்ட பேரணி... பாஜக மாநில பொதுச்செயலாளர் தகவல்....

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

ஈரோட்டில் இன்று (03.01.2020) பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை  கூட்டம்  மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளா் நரேந்திரன், தேசிய இளைஞா் அணி துணை தலைவா் மு௫கானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கியும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள்.
 

மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. இந்த சட்டத்தால் தமிழகத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கோலமிட கற்று கொண்டுள்ளனர்.  மார்கழி மாதத்தில் கோலமிட்டால் நல்லதுதான். ஆனால் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போடப்படும் கோலம் தான் அலங்கோலமாக உள்ளது. 

bjp party rally in erode, chennai discussion meeting

இந்த சட்டத்தில் மக்களுக்கு உள்ள பலன்களை தெளிவு படுத்தும் வகையில் மாநில பாஜக சார்பில் தமிழகத்தில் நான்கு இடங்களில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

அதன்படி வருகிற 7- ஆம் தேதி சென்னையிலும் 8- ஆம் தேதி ஈரோட்டிலும், ஒன்பதாம் தேதி திருச்சி மற்றும் மதுரையிலும் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. ஈரோட்டில் நடக்கும் பேரணியில் மத்திய மின்சார துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தலைமை தாங்குகிறார். இந்த பேரணியில் ஈரோடு கோவை நீலகிரி திருப்பூர் நாமக்கல் சேலம் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க.வினர் கலந்து கொள்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த பேரணியில் எங்களது கூட்டணி கட்சிகளும் பங்கேற்கும். இதைத்தொடர்ந்து இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாங்கள் வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்றார்.
 

பா.ஜ.க நடத்தும் இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி வழங்கக் கூடாது என பெரியாரிய மற்றும் தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.