மனதின் குரல் நிகழ்வைப் பார்க்க அழைப்பு விடுத்த பாஜகவினர் (படங்கள்)  

பிரதமர் நரேந்திர மோடி பேசும் ‘மனதின் குரல்’100வது நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) அன்றுஒளிபரப்பாகிறது. இதனை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியானது சென்னை மெரினா நடு குப்பத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அதன் முன்னேற்பாடாக நடு குப்பத்தில் உள்ள அனைத்து குடும்பங்களையும் நேரடியாக கலந்து கொள்ள திருமணத்திற்கு அழைப்பது போன்று அழைப்பிதழை அச்சடித்து நாதஸ்வர மேள தாளங்களுடன் பெண்கள் பட்டுப் புடவையுடன் தமிழர் பாரம்பரிய முறையில் தாம்பூலத்தட்டுடன் வெற்றிலை, பாக்கு, இனிப்பு, பழங்களுடன் அழைப்பிதழை நேரடியாக வைத்து பாஜகவினர் அழைப்புவிடுத்தனர்.

Chennai invite Maan ki baat Marina Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe