அ.தி.மு.க.வில், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த 7-ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது அ.தி.மு.க தலைமை. அதனை அடுத்து, தற்போது அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி தொடருமா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட அன்றே செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பா.ஜ.க இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடனோ அதேவேளை தி.மு.க.வுடனோ கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நேரத்தில் தான், கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும். தற்பொழுது அ.தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி என்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.