நிதியுதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்! (படங்கள்)

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19/11/2021) காலை சென்னை அருகே கரையைக் கடந்தது.

இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், இன்று (19.11.2021) நிதியுதவி வழங்கக் கோரி பெரவள்ளூர் ஜங்சனில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதோடு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Chennai floods struggle
இதையும் படியுங்கள்
Subscribe