Skip to main content

பாஜக நிர்வாகி கழுத்து அறுத்து படுகொலை; குவாரி அருகே சடலம் கண்டெடுப்பு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

BJP executives neck slit passed away police intensive investigation
கலி கண்ணன்

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாஜக நிர்வாகி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள வேப்பாளம்பட்டியில் தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்குச் செல்லும் வழியில் வியாழக்கிழமை (நவ. 24) காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

 

சடலத்தின் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டதற்கான காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின், ஆய்வாளர்கள் பார்த்திபன், லட்சுமி, பத்மாவதி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர்.  

 

முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் திருப்பத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த கலி கண்ணன் (52) என்பது தெரிய வந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவராக இருந்து வந்துள்ளார்.  உள்ளூரில் சொந்தமாக இரும்பு கடை, குடிநீர் கேன் சப்ளை ஆகிய தொழில்களைச் செய்து வந்துள்ளதோடு, வட்டித்தொழிலும் செய்து வந்துள்ளார். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோரும் நிகழ்விடம் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். எனினும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.  நவ. 23ம் தேதி இரவு திருப்பத்தூரில் அவருடைய வீடு அருகே மர்ம நபர்கள் நான்கு பேர் நோட்டம் விட்டுள்ளதாகவும், அவர்கள் கலி கண்ணனை காரில் கடத்திச்சென்று தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  

 

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கலி கண்ணன் பேசியதாகவும், அதைக் கண்டித்து மர்ம நபர்கள் சிலர் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது பாஜகவினர் அளித்த புகார் காவல்துறை விசாரணையில் உள்ளது. அப்போது மிரட்டிய கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். கொடுக்கல் வாங்கல் காரணமாகக் கொல்லப்பட்டாரா? அல்லது மத ரீதியான மோதலில் கொலை நடந்ததா? மர்ம நபர்கள் அவரை வேறு இடத்தில் வைத்துக் கொலை செய்துவிட்டு, ஊத்தங்கரை அருகே கொண்டு வந்து சடலத்தை வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.  

 

கொலையுண்ட கலி கண்ணன் குடும்பத்தினரிடமும் தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவருடைய செல்போனில் பதிவாகியுள்ள எண்கள், அவரிடம் கடைசியாக பேசிய எண்களின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்கரைக்கு வரும் வழியில் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

கலி கண்ணன் கடைசியாக எங்கு இருந்தார்? அவரை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர்கள் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.  இது ஒருபுறம் இருக்க, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடற்கூராய்வு நடந்து வரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அருகிலும், கலி கண்ணனின் சொந்த ஊரிலும் காவல்துறை பந்தோபஸ்து பலப்படுத்தப்பட்டு உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; 4 பேர் பலி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 firecrackers godown issue 4 people involved

 

கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் அருகில் இருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.

 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? எனத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

wife who incident her husband along with her boyfriend

 

போச்சம்பள்ளி அருகே, ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த கணவரை, மனைவியே ஆண் நணவருடன் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என்.தட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (35). டைல்ஸ் வியாபாரி. மேலும், சொந்தமாக சரக்கு ஆட்டோவும் இயக்கி வந்தார். இவருடைய மனைவி சந்தியா (27). கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வியாபாரம் தொடர்பாக கந்தன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். 

 

இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து மார்ச் 14ம் தேதி இரவு திடீரென்று அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அங்கே கந்தன் கத்தியால் குத்தப்பட்டு, பேச்சு மூச்சின்றிக் கிடப்பதைப் பார்த்தனர். அவரை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இதில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காதல் தம்பதிகளின் ஆரம்பக்கட்ட திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுள்ளது. கந்தன் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி சில நாட்கள் தொடர்ச்சியாக வெளியூரில் தங்க நேர்ந்தது. அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.  

 

இந்த நிலையில் கந்தன் வீட்டிற்கு என்.தட்டக்கல்லைச் சேர்ந் சிவசக்தி (23) என்ற வாலிபர் தினமும் பாக்கெட் பால் வாங்கிக் கொடுத்து வந்தார். இதனால் சந்தியாவுக்கும் சிவசக்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. கந்தன் வெளியூர் சென்று விடுவது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்தது. ஒருகட்டத்தில் அவர்கள் தனிமையில் சந்தித்து உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இவர்களின் ரகசிய உறவு அரசல் புரசலாக வெளியே கசிந்தது. 

 

இதையறிந்த கந்தன், சந்தியாவின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தார். மனைவியின் கைப்பேசியை ஆய்வு செய்ததில் சிவசக்தியுடன் வாட்ஸ்ஆப் வழியாக பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தன், சிவசக்தியுடன் உள்ள தொடர்பை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்தார். ஆனாலும் கணவருக்குத் தெரியாமல் சந்தியா ரகசியக் காதலனைச் சந்தித்து வந்தார். இந்த நிலையில் கந்தன், வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சந்தியா, ஆண் நண்பர் சிவசக்தியை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார். சிவசக்தியும் சிறிது நேரத்தில் சந்தியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

 

இது ஒருபுறம் இருக்க, மனைவியையும் சிவசக்தியையும் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டு இருந்த கந்தன், தான் வெளியூர் செல்வதாக  நாடகமாடி இருக்கிறார். இந்த நிலையில் தான், வீட்டிற்கு சிவசக்தி வந்ததை தெரிந்து கொண்ட கந்தன், சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திடீரென்று வந்து சேர்ந்தார். கந்தனின் திட்டத்தை அறியாத இருவரும் தனிமையில் இருந்தபோது அவரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். இதையடுத்து கந்தன் மனைவியை அடித்து உதைத்தார்.  அப்போது சந்தியாவும் சிவசக்தியும் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கந்தனின் கண்களில் தூவினர். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். 

 

இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கந்தனின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் கந்தன் மூர்ச்சையானார். இதையடுத்து வீடு முழுவதும் சிதறிக்கிடந்த ரத்தத்தை இருவரும் கழுவிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது காவல்துறை விசாரணையில்  தெரிய வந்தது. கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் உள்ளூரில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய பிறகு சிவசக்தியை சேலம் மத்திய சிறையிலும் சந்தியாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.