விஜய் நடிப்பில்உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின்படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்தஇரண்டு நாட்களாகவிஜய்வீட்டில்வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டநிலையில்சூட்டிங் தளத்தில் இருந்துநடிகர்விஜயை சென்னைஅழைத்து சென்று வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்குபடப்பிடிப்பு நடத்தஅனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிப்.1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை படப்பிடிப்பு நடத்தமுறையான அனுமதி பெறப்பட்டுதான் அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருவதாகபடக்குழுதெரிவித்துள்ளது. என்எல்சி அதிகாரிகளும் அனுமதி பெற்றுதான்படப்பிடிப்பு நடந்து வருவதாகதெரிவித்துள்ளனர்.