Skip to main content

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம்!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

BJP at master shooting site!

 

அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிப்.1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை  படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறப்பட்டுதான் அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. என்எல்சி அதிகாரிகளும் அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்