Skip to main content

வாய்ப்பிருந்தால் தமிழக பாஜக தலைமை ஏற்க தயார்-எஸ்.வி.சேகர்

Published on 23/09/2018 | Edited on 23/09/2018

 

svs

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர் வாய்ப்பிருந்தால் தமிழக பாஜக தலைமை ஏற்க தயார் என தெரிவித்துள்ளார்.

 

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர் கூறுகையில்,

 

நான் பாஜகவிற்கு வந்தது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்காகத்தான் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சென்ற முறைகூட நான் வாரணாசிக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். பெங்களூரில் பி.சி.மோகன், ஆனந்தகுமார் ஆகியோர் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள் சென்று பிரச்சாரம் செய்தேன். ஆனால் இந்த தலைமை என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்னை பயன்படுத்தி கொண்டால் அவர்களுக்கு நல்லது அப்படி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. 

 

எனக்கு தமிழக பாஜக தலைமை ஏற்பதற்கான சூழ்நிலை மாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால்  கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு இப்போது  இருப்பதை விட அதிக சதவிகித ஓட்டை வாங்கி காட்ட முடியும். 

 

நீதிமன்றத்தை அவதூறாக பேசினார் என்று எச்.ராஜா மீது வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கை எதிர்கொண்டு அவர் பேசினாரா இல்லையா என ராஜா நிருபிப்பார். தமிழகத்தில் யாரையாவது கைது செய்தால் உடனே எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை, எச்.ராஜாவை ஏன்  கைது செய்யவில்லை என்கூறுகிறீர்கள்  சைக்கிள்ல டபுள்ஸ் போறதுக்கு கொலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு எனவே எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்க்க முடியாது. சட்டத்தில் பல நிலைகள் இருக்கு கொலை முயற்சி, கொலை செய்வது, திருடுவது என, எல்லாத்திற்கு ஒரே தண்டனை இல்லை. எந்த செக்சனுக்கு என்ன ஆக்ஷ்ன் எடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு தெரியும் என்றார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.