மதுபோதையில் நடக்க முடியாமல் இருந்த பா.ஜ.க. பிரமுகரை அக்கட்சித் தொண்டர்கள் தூக்கிச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்துத் தலைவர் அசோக்குமார், பா.ஜ.க.வில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். ராயப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்திற்கு பின்னர், பொங்களூர் அருகே உள்ள உணவு விடுதியில் மது அருந்த சென்ற அசோக்குமார், போதையில் நடக்க முடியாமல் இருந்ந்துள்ளார். இதனால் பா.ஜ.க.வினர் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.