சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தேசிய கல்விக் கொள்கைக்காக தமிழக பா.ஜ.க. பெற்ற 40 லட்சம் கையெழுத்துப் பிரதிகளை முதல்வரிடம் வழங்கினார்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி இடையே முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பிரச்சனை நீடிக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.