ADVERTISEMENT

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா அரசியல் செய்ய வேண்டாம் -பா.ஜ.க தலைவர் எல்.முருகன்!

04:59 PM Sep 15, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு நடந்து முடிந்ததுள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்தத் தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் இந்த நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், இந்த விவகாரம் தமிழகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளது. மேலும் நடிகர் சூர்யா கடும் வார்த்தைப் பிரயோகத்துடன் கூடிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் அரங்கில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பா.ஜ.க மாநில தலைவர் முருகன், நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT