Skip to main content

பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்-பாஜக முருகன் பேட்டி

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
BJP L MURUGAN INTERVIEW

 

2021 ஆம் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கைகாட்டும் கட்சியே  ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு  பிறகு செய்தியாளர்களை சந்தித்த முருகன், 'இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் பாஜக கைகாட்டும் கட்சியே  ஆட்சி அமைக்கும்' என தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக-திமுக இடையேயான போட்டி இனி இருக்காது. இனி பாஜக-திமுக என்றுதான் போட்டி இருக்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது இந்த கருத்தை முருகன் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்