Skip to main content

நள்ளிரவில் பாஜக கல்யாணராமன் கைது!

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

BJP Kalyanaraman  arrests at midnight

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பாஜக பிரமுகரான கல்யாணராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் மருத்துவர் ஷாலினி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று நள்ளிரவு அவரை கைது செய்துள்ளனர். புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமனின்  ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்க சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்குப் பரிந்துரை அளித்துள்ளனர்.

 

udanpirape

 

சார்ந்த செய்திகள்