ADVERTISEMENT

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல் பாஜகவினர் கற்பனையில் உள்ளார்கள்- தி.மு.க, எம்.பி தயாநிதிமாறன்!!   

11:39 AM Aug 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்முருகன், தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியால் கவரப்பட்டு பாஜகவிற்கு மாற்று கட்சியினர் வருகின்றனர். யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கறுப்பர் கூட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் விசாரிக்கவில்லை. கறுப்பர் கூட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்னமும் கண்டிக்கவில்லை, அவர் நிலைப்பாடுதான் என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT


இந்நிலையில் சென்னையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் செய்தியாளர் சந்திப்பில், “தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல் பாஜகவினர் தங்களை கற்பனை செய்து கொள்கின்றனர். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT