Skip to main content

"தமிழக தலைவர் பற்றி நாங்களே கவலைப்படவில்லை" - பாஜக இல.கணேசன் பேட்டி 

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,

"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் எந்த ஒரு இந்தியனுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த விஷயத்தில் நாட்டு நலனை நினைக்காமல் ஓட்டு நலனை கருத்தில் கொண்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் நடத்திவரும் திமுகவின் கையெழுத்து இயக்கம் மக்களின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

 

 bjp ila ganessan interview

 

தைப்பூசத்திற்கு தமிழகத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சீமான் கேட்பது வேடிக்கையாகத்தான் உள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம். தேவைப்பட்டால் இதை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

பாஜக, அதிமுக கூட்டணி தொடரும். அதில் நம்பிக்கையோடு இருக்கிறோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை ஏதோ ஒரு சாதாரண கொலையாக கருத முடியாது. அந்த வழக்கில் உள்ளவர்கள் விடுதலை என்ற கோரிக்கை எழுந்தபோது ஆளுநர்முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆளுநரின் முடிவு குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வருமான வரித்துறை சோதனை விஷயத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. வருமான வரித்துறைக்கு கிடைத்தே தகவலின் அடிப்படையியிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. எந்த பிண்ணியிலும் மத்திய அரசு இல்லை.

நெய்வேலி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்றுதான் பாஜக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். விஜய் என்பதற்காக மட்டும் அல்ல.
தமிழகத்தில்  பாரதிய ஜனதா மாநில தலைவர் நியமனம் குறித்து நாங்களே கவலைப்படவில்லை. யாராக இருந்தாலும் பாஜகவை சேர்ந்த ஒருவரே தலைவராக வருவார் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.