Skip to main content

“தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை!” - முத்தரசன் அதிரடி!!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

BJP has no place in Tamil Nadu! Mutharasan Action !!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் கட்சி அலுவலகம் அருகில், குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் வந்திருந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது,

 

“குடியரசு சட்டம் நம்மை வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறி வருகிறார். ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனால் கரோனா நோய்த்தொற்று ஏற்படாதா? ஆனால் கரோனா தொற்றைக் காரணம் காட்டி, கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களைத் தெரிவிக்காமல், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார். அதன்பிறகே, சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கும் எனக்கும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் முதல்வர் ஆன பிறகு, மக்களின் குறைகளை 100 நாள்களில் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்க்கடவுள் முருகன் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவர். அவர் பொதுவானவர். அவரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம்.

 

பருவமழை, புயல் காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிவாரணம் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது.

 

இப்போதைய நிலையில், 3வது அணி என்பது சாத்தியமில்லை. திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதாவின் மரண வழக்கை விசாரித்து வரும் ஒரு நபர் விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் யாருக்கு எத்தனை சீட் என்பது முக்கியமில்லை. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது.” இவ்வாறு முத்தரசன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.