Skip to main content

''ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள் அனாதைகள்''-எச்.ராஜா விமர்சனம்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

bjp H. Raja Interview

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இது குறித்த கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ''யாரோ வெற்றிமாறனாம்... வெற்றி மாறனோ, தோல்வி மாறனோ தெரியவில்லை. ராஜராஜ சோழனை இந்துவாக மாத்த ஞானஸ்தானம் பண்ணிட்டோமா. எனக்கு அவ்வளவு சரித்திர அறிவில்லை. அவர் பெயரை வெற்றிமாறன் அப்படின்னு வைத்திருக்கிறார். அவரே ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு சர்ச், ரெண்டு மாஸ்க் எங்க இருக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும். ராஜராஜ சோழன் சிவனுடைய பக்தன். எந்த அளவுக்கு என்றால் தன்னை சிவபாத சேகரன் என்று அழைத்துக் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன். அவர் ஹிந்து இல்லையா'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ''அவர் இந்து கிடையாது. அப்பொழுது சைவம் வைணவம் என்ற மதங்கள் தான் இருந்தது. அதனால் அவர் விரும்பிய சைவ கடவுளான சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற கருத்தை அவர்கள் தரப்பு முன் வைக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்ப, வழக்கம்போல் ஆத்திரமடைந்த எச்.ராஜா, ''நீங்கள் தவறான ஆர்க்யூமென்டை என்னிடம் வைக்க கூடாது'' என்றார்.

 

அதற்கு செய்தியாளர், ''நான் வைக்கவில்லை. திருமாவளவன், ஜோதிமணி எம்பி ஆகியோர் வைக்கின்றனர்'' என்றார். அதற்கு எச்.ராஜா, ''தேச விரோதிகள், முட்டாள்கள் பேசுகிறார் என்றால் அதை நாம் பேசக்கூடாது. வேதம் வேற தமிழ் வேற இல்லை. வேதம் வேற சைவம் வேற இல்லை. அதனால் ராஜராஜ சோழன் இந்து தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் இந்து தான். இந்து ஒரு அனாதி மதம். அதற்கு துவக்கமே கிடையாது. அனாதி என்றால் அனாதை அல்ல ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள்தான் அனாதைகள்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.