26ஆம் தேதி விவசாயிகள் டெல்லியில் நடத்திய ட்ராக்டர் பேரணியில் போலீசார் விசாயிகளைத் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில், நேற்று (27.01.2021) மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு விவசாயிகள் பேரணியில் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது எனவும், அன்றைய தினம் இந்தியாவின் கருப்பு நாள் என்றும், இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் எனவும்கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.