Skip to main content

“இந்தியாவில் எந்தவொரு மிஷினரி அமைப்பையும் பா.ஜ.க. அரசு தடை செய்யவில்லை” - ஹெச்.ராஜா

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

“The BJP government did not ban any missionary organization in India. ”- H. Raja

 

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் மாநகர மாவட்ட பா.ஜ.க. சார்பில் மருத்துவர் சரவணன் தலைமையில் ‘நல்லாட்சி தினம்’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

 

பின்னர் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என செல்கிறார்கள். அனைவரும் சேர்ந்தால் கூட பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட தடையில்லை. மதுக்கடைகள் திறக்க மட்டுமே நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அரசு அந்தஸ்து பெற முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம். இந்தியாவில் பிற மாநிலங்களை விட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த சட்டங்களை காங்கிரஸ் பின்பற்றவில்லை. அச்சட்டங்களை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் பெறும் நிதியை முறையாக செலவு செய்யப்பட்டதா என்பதற்காகவே வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. 2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஆய்வு செய்ததில் எந்தவொரு மிஷினரி அமைப்பும் வரவு - செலவு தாக்கல் செய்யவில்லை. சாப்பாடு போட்டு மதம் மாற்றம் மட்டுமே செய்துள்ளனர். இந்தியாவில் எந்தவொரு மிஷினரி அமைப்பையும் பா.ஜ.க. அரசு தடை செய்யவில்லை. சிதம்பரம் மத வாதமாக பேசி வருகிறார். சி.ஏ.ஏ. சட்டம் இயற்றிய உடன் சிதம்பரம் வேலி தாண்டி வந்தவரை என்ன செய்வது என கேட்டார். வேலி தாண்டி வரும் மாட்டை அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும். பா.ஜ.க. அரசு மத ரீதியாக மக்கள் பிரித்து பார்க்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. பழி வாங்கும் நடவடிக்கை என்பது இரு முனை கத்தி, திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளது. முன்ன பாய்ந்த வாய்க்கால் பின்ன பாயும் என திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.