Skip to main content

மின்கட்டணம் செலுத்தாத பா.ஜ.க அலுவலகத்திற்கு பூட்டு; மின்சாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

Bjp electricity bill issue in nagapattinam

 

மின் கட்டணம் சரிவர செலுத்தாத நாகை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தின் மின் இணைப்பை துண்டித்ததால், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்திற்கு பா.ஜ.க.வினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள்  கூறுகின்றனர். இந்த நிலையில், வெளிப்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் பா.ஜ.க.வின் மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அங்கிருந்த ஃபீஸ் கேரியரை எடுத்துச் சென்றனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.கவினர் வெளிப்பாளையம் துணை மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதோடு அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 


பா.ஜ.கவினரின் முற்றுகையால் தினசரி பணிகளான மின்கட்டணம் கட்டும் பணிகளும் பாதிக்கபட்டதுடன், அங்கு பரபரப்பும் நிலவியது.

 

பிறகு மின் பகிர்மான மேற்பார்வையாளர் அருள், தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பா.ஜ.க.வினரோ, “மின் இணைப்பை துண்டித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அதிகாரிகளோ, “கட்டவேண்டிய மின்கட்டணத்தை விரைந்து செலுத்துங்க அப்புறம் மற்றதைப் பேசலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.