Skip to main content

திமுகவிற்கு எதிராக பாஜக – தினகரன் ரகசியக் கூட்டணி! :அம்பலப்படுத்தும் வைத்தியநாதன் !

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

கோடை வெப்பத்தையும் விட தேர்தல் வெப்பம் அனல் பறக்கத் துவங்கியுள்ளது. வெற்றி மட்டுமே தங்களின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் என்பதால் கச்சைக்கட்டிக்கொண்டு களத்தில் சுழன்றபடி இருக்கின்றன கழகங்கள். அதிமுக, திமுக கட்சிகளுக்கு சவாலாக இருப்பார் என பரபரப்பாக சொல்லப்பட்ட டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. தொண்டர்களோ சுறுசுறுப்பில்லாமல் சோர்ந்து போயிருக்கிறார்கள். வைட்டமின் ’ ப ’ இன்னும் வந்து சேராததால் அக்கட்சியினர் மத்தியில் வேகம் அதிகரிக்கவில்லை. அ.ம.மு.க. சார்பில் களத்தில் நிற்கும் வி.வி.ஐ.பி. வேட்பாளர்கள் தொகுதிகளில் மட்டும் வேகம் தெரிகிறது. 

          

 

இந்த நிலையில், சென்னையில் உள்ள தினகரனின் வீட்டுக்குச் சென்று கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு தினகரனுக்கு எதிரான அதிரடியை கிளப்பியிருக்கிறார் தென்சென்னை வடக்கு மாவட்ட அ.ம.மு.க.வின் துணை செயலாளர் வைத்தியநாதன். இவரைப் போல தமிழகம் முழுவதும் பதவிகளை ராஜினாமா செய்யும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தினகரனின் தொண்டர்கள். ராஜினாமா செய்த பலர், திமுகவில் இணைந்து வருகின்றனர். 

 

            

 BJP-Dinakaran secret coalition against DMK: exposed vaitheesavaran

 

தினகரனுக்கு எதிராக வாள் சுழற்றியுள்ள வைத்தியநாதனை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, ‘’ தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கலைராஜன், திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்காக திருச்சிக்கு கலைராஜன் புறப்பட்டு விட்டார் என அறிந்ததும், அவர் இணைவதற்கு முன்பாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் கொடுத்த யோசனையின்படி கலைராஜனை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார் தினகரன். 

            

 

 BJP-Dinakaran secret coalition against DMK: exposed vaitheesavaran

 

நீக்கியதுடன் கலைராஜன் இருந்த பதவியில் சுகுமார்பாபுவை நியமித்தார் தினகரன். இது, என்னைப் போன்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகளை கோபப்பட வைத்தது. முறைப்படி புதிய மா.செ.வாக என்னைத்தான் நியமித்திருக்க வேண்டும். அல்லது மாவட்ட கழகத்தில் உள்ள நிர்வாகிகளை அழைத்து விவாதித்திருக்க வேண்டும். இதை எதையும் செய்யாமல், வெற்றிவேல் சொல்கிறார் என சுகுமார்பாபுவை நியமித்தார். இப்பதவியில் நியமிக்கும் வரை சுகுமார்பாபு எங்கிருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. கட்சியோடு தொடர்பில்லாதவரை எப்படி பெரிய பதவியில் நியமிக்கலாம்? எல்லாம் பணம் படுத்தும்பாடு ! கட்சிக்காக உழைக்கவும், கொடி பிடிக்கவும், போஸ்டர் ஒட்டவும், காசு-பணம் செலவழிப்பதும் என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்கள். ஆனால், கட்சி பதவி மட்டும் முறைவாசல் செய்பவர்களுக்கா?

          

 

அதே சமயம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனது சாதியின் அடையாளமாகவே நடத்திக்கொண்டிருக்கிறார் தினகரன். மாநில பொறுப்புகள் தொடங்கி கீழ்நிலை பொறுப்புகள் வரை 90 சதவீதம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமைத் தரப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். மாற்று சமூகத்தினரை தினகரன் அரவணைப்பதில்லை.  குறிப்பாக, வன்னியர் சமூகமானாலே அவருக்கு எட்டிக்காயாக இருக்கிறது. ஆனால், கட்சிக்கு செலவு செய்ய மட்டும் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார் தினரகரன். இதனால், முக்குலத்தோர் தவிர அனைத்து சமூகத்தைச் சேர்ந்த தொண்டர்களும் தினகரன் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். சாதி கட்சி நடத்தும் தினகரன், பேசாமல், அ.ம.மு.க. கட்சியை முக்குலத்தோர் முன்னேற கழகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். 

         

 BJP-Dinakaran secret coalition against DMK: exposed vaitheesavaran

 

மேலும் இன்றைய சூழலில் தினகரன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. வெற்றிவேலிடம் அடகு வைத்துள்ளார் தினகரன். வெற்றிவேல் சொல்வதை மட்டுமே நிறைவேற்றுகிறார் அவர். தமிழகம் முழுவதும் கட்சி பதவியில் யார் இருக்க வேண்டும் ? யார் இருக்கக்கூடாது ? என வெற்றிவேல்தான் தீர்மானிக்கிறார். அவரது கட்டளையை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் தினகரன், அதற்கேற்ப கட்சியனரை நீக்கவும் சேர்க்கவும் செய்து வருகிறார். இதனையெல்லாம் ஜீரணிக்க முடியாமல்தான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். 

         

 

அதிமுக பிளவுப்பட்டதற்கு தினகரன் தான் காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட வேண்டாம் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தினர். அதை ஏற்று இவர் போட்டியிடாமல் தவிர்த்திருந்தால் அதிமுக உடைந்திருக்காது. நான் தான் போட்டியிடுவேன் என சர்வாதிகாரத்தனமாக முடிவு செய்து தேர்தலில் குதித்தார். 

               

 

தினகரன் ஜெயித்தால் முதல்வராகி விடுவார் என பாஜகவுக்கு சொல்லப்பட்டது. அதனால் கட்சியை உடைத்தது பாஜக. தினகரன் தனி மரமானார். சில எம்.எல்.ஏ.க்களை வளைத்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களின் சமயோஜித முடிவுகளால் தினகரனின் திட்டம் தவிடுபொடியானது. எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டவர்களை வைத்து தனிக்கட்சி துவக்கி, தற்போது முக்குலத்தோர்க்கான சாதி கட்சி நடத்தி வருகிறார் தினகரன்.  

                

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உண்மையான நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விருப்பம் இல்லை. இதனை ஏற்க மறுத்து, தேர்தலில் கட்சியை இறக்கிவிட்டுள்ளார் தினகரன். இதற்கு பின்னணியில் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது. அதாவது, பாஜகவின் பினாமி ஆட்சியாக  இபிஎஸ், ஓபிஎஸ் இருப்பதாக திட்டுகிறார் தினகரன். ஆனால், உண்மையில் பாஜகவின் பினாமியாக அரசியல் செய்வது தினகரன்தான். 

               

 

பாஜகவை கடுமையாக எதிர்ப்பதும் விமர்சிப்பதும்  திமுக-காங்கிரஸ் கூட்டணிதான். இக்கூட்டணியின் ஓட்டு வலிமையை குறைக்க வேண்டுமென்பது பாஜகவின் திட்டம். இதனை செயல்படுத்த பாஜக தலைமை எடுத்த, எடுப்பார் கைப்பிள்ளைதான் தினகரன். அதாவது, அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த கிறுஸ்தவர்களும், முஸ்லீம்களும் திமுக கூட்டணியை ஆதரிப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான  மத சிறுபான்மையினரின் இத்தகைய வாக்குகள் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பலம். அதனால் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லக்கூடாது என திட்டமிடுகிறது பாஜக தலைமை. திமுக கூட்டணிக்கு செல்லும் அந்த வாக்குகள் தடுக்கப்பட்டால்தான் அதிமுக-பாஜகவுக்கு வெற்றிகிடைக்கும் என பாஜக தலைமைக்கு தகவல் தரப்பட்டுள்ளது.  

              

திமுக கூட்டணிக்குச் செல்லாமல் அந்த வாக்குகள் மடை மாற்றம் செய்யப்பட வேண்டுமென்பதே பாஜகவுன் ஒன் லைன் அஜெண்டா ! ஆக, அந்த வாக்குகளை மடைமாற்றம் செய்ய, மக்கள் அறிந்த முகம் ஒன்றும் பாஜகவுக்கு தேவைப்பட்டது. அந்த முகம்தான் தினகரன். அதனாலேயே, திமுகவுக்கு இணையாக பாஜகவை விமர்சிக்குமாறு தினகரனுக்கு அசைண்மெண்ட் கொடுத்தது பாஜக ! அப்படி அதிகப்படியாக திட்டினால்தான் பாஜக-அதிமுகவுக்கு எதிரான முஸ்லீம், கிறுஸ்துவ வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் தினகரனுக்கு செல்லும். அப்படி வாக்குகள் பிரிவது தங்களுக்கு சாதகம் என திட்டமிட்டு தினகரனை வளைத்தனர். தினகரனும் இதற்கு உடன்பட்டார். அதற்கேற்ப அவரும் கடுமையாக அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து வருகிறார். 

             

அதனால்தான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் வலியுறுத்தியும் அதனை ஏற்காமல் தேர்தலில் குதித்துள்ளார் தினகரன். அவரின் இந்த முடிவுக்கு பாஜகதான் காரணம். பாஜக அசைண்மெண்டின் ‘ பி ’ டீமாக தினகரன் மாறியிருக்கிறார் என்பது தினகரனின் மோ(ச)டித்தனம் ! ‘’ என்றார் அதிரடியாக. 

            

தினகரனின் ’மோடி‘யிசம் மெல்ல மெல்ல கிழியத்துவங்கியுள்ளது !

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது