Skip to main content

"தாய் மதத்துக்கு திரும்புவோர் மனுக்களை கிடப்பில் போடுகிறார்கள்" - பாஜக புகார் 

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

BJP complains Petitions for conversion mother religion are waiting list

 

தமிழ்நாட்டில் பிற மதங்களைத் தழுவியவர்கள் தாய் மதத்துக்குத் திரும்ப விரும்பும் போது, அவர்களின் பெயர்மாற்றம் மற்றும் மதமாற்றம் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு கண்டவுடன், அந்த விபரங்கள் அரசு கெசட்டில் வெளியிடப்படுகின்றன.  

 

இந்தப் பணியை சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும் உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்கம் மற்றும் மதுரை  கே.புதூரில் இயங்கிவரும் அதன் கிளை அலுவலகம் செய்து வருகிறது.   


இந்நிலையில், மேற்கண்ட அலுவலகம் குறித்து விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் (அரசு தொடர்பு பிரிவு) ஜெயக்கொடி பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலருக்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் ‘இந்த அலுவலகம் குறித்த குறைகள் சமீப காலமாக பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது.  இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்களில் பலரும் மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. 

 

ஏனென்றால், அனுப்பப்படும் மனுக்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், காரணமில்லாமல் சான்றிதழைத் திரும்பவும் கேட்பது, தேவையில்லாத சான்றிதழைக் கேட்பது, தொடர்ந்து மூன்று மாதங்கள் மனுக்களைக் கிடப்பில் போடுவது, அதன்பிறகு திருப்பி அனுப்புவது போன்ற தவறான செயல்கள் நடந்து வருகின்றன. 

 

எனவே, இது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்ட அலுவலகத்தில் நன்றாகத் திறம்பட வேலை பார்க்கக் கூடிய, கூடுதல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகளை நியமித்து, துரிதமாகப் பணியாற்ற தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.