Skip to main content

நன்கொடை கேட்ட பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கைது; கார்கள் பறிமுதல்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

nn

 

கட்சிக்கான நிதி என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவின் மாநில நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது சூட்டைக் கிளப்பியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் - வேலன் புதுக்குளம் சாலையில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கிரஷ்ஷர் கற்கள் எம்.சாண்ட் தயாரிப்பதாகச் சொல்லப்படுகிறது. நகரின் முக்கிய புள்ளிகள் சிலருக்குச் சொந்தமான அந்த கல்குவாரியில் அளவுக்கதிகமான லோடுகள் அனுப்பப்படுவது ஊரறிந்த ரகசியம் என்கிறார்கள். இதன் மேலாளராக நவீன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம், சாத்தான்குளம் ஆனந்தவிளையைச் சேர்ந்த சித்த மருத்துவரும் பாஜக மாநில இளைஞரணிச் செயலாளருமான பூபதி பாண்டியன் மற்றும் பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயற்குழு உறுப்பினருமான திருச்செந்தூரை சேர்ந்த ஜெய ஆனந்த் என்ற சரண் இருவரும் கல்குவாரிக்கு கார்களில் வந்தவர்கள் அங்கு பணியிலிருந்த மேலாளர் நவீன்குமாரிடம் முதலாளி எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்று தெரிந்ததும் மேலாளர் நவீன்குமாரிடம் கட்சிக்கான நன்கொடை மற்ற இடங்களில் தருகிறார்கள். நீங்களும் தர வேண்டும் என்று கேட்டுள்ளனராம். அதற்கு அவர் மறுக்கவே, ஆவேசமான இரு நிர்வாகிகளும் நவீன்குமாரை அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனராம்.

 

இதுகுறித்து கல்குவாரி மேலாளர் நவீன் குமார், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். புகாரின்படி காவல் நிலைய ஏட்டு ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்ய, இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் எஸ்.ஐ. சுரேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளரான பூபதி பாண்டியன் மற்றும் பா.ஜ.க. மாநில இளைஞரணிச் செயற்குழு உறுப்பினர் ஜெய ஆனந்த் இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் பின்னர் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

 

இந்நிலையில் எதிர் புகாராக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெய ஆனந்தும் புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர், ‘நாங்கள் இருவரும் காரில் சென்றபோது குவாரி லாரியிலிருந்து கல் விழுந்ததில் தங்கள் கார் சேதமானதாகவும் எனவே லாரியைப் பின்தொடர்ந்து சென்று கல்குவாரி உரிமையாளரிடம் கார் சேதமானது தொடர்பாக பணம் கேட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.