Skip to main content

பிஜேபி அரசை தூக்கி எறிவதற்கான வாய்ப்பு வருகிறது ! திருச்சியில் முழங்கிய அருந்ததிராய் ! 

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக 'எதிர்த்து நில்' மாநாடு திருச்சியில் உழவர் சந்தையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் போலிஸ் தரப்பில் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஏகப்பட்ட கடுமையான நிபர்ந்தனைகளுடன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தனர். 

 

a

 

இந்த மாநாட்டை துவக்கி வைத்து  அருந்ததிராய் பேசும் போது..   ‘’பாபர் மசூதி இடிப்பு சம்பவம், தவறான பொருளாதார கொள்கையால் உருவான தாராளமயம் ஆகிய இரண்டும் ஒடுக்கப்பட்டோரை மேலும் ஒடுக்கப்பட்டோராக மாற்றும் சக்தியாக உருவெடுத்து நிற்கின்றன. அறிவு சார் பல்கலைகழகங்கள் தொடங்கி மக்களின் சேவை சார்ந்த பெரு நிறுவனங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் மதவாத சக்திகள், கார்ப்பரேட் சக்திகளின் அதிகாரமே மேலோங்கி நிற்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. 

 

அறிவாளர்களை மட்டும் வீழ்த்தாமல் மக்களின் அறிவையும் வீழ்த்த வேண்டும் என்ற வகையில் மக்களை சிந்திக்க வைக்காமல் உரிமைகளுக்காக போராடும் நிலையிலேயே வைத்துள்ளனர். இஸ்லாமியார்கள், தலித்சமூகத்தினர், விவசாயிகள், கம்யூனிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட்கள் என தனித்தனியாக அவரவர் உரிமைகளுக்காக போராடி வந்தனர். இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகள் பெருநிறுவனங்களுக்கு எதிராக போராடும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறிய மோடி, அதனை செயல்படுத்தவில்லை. மாறாக பெருநிறுவனங்களே அசுர வளர்ச்சி பெற்றுள்ளன.

 

a

 

அதானியின் சொத்துகள் 125 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. 75 சதவீதம் இருக்க வேண்டிய சொத்துகள் 9 பெருநிறுவன முதலாளிகள் வசம் உள்ளன. தமிழக அரசியலும், மத்தியில் காங்கிரஸ் மீதும் வாரிசு அரசியல் குறித்த விமர்சத்தை முன் வைக்கும் பிஜேபி, பெருநிறுவனங்களின் முதலாளித்துவத்தின் வாரிசு அரசியலை பற்றி கவலைப்படவில்லை. வரும் தேர்தலில் பாஜ தோல்வியடைந்தாலும், அனைத்து நிலைகளிலும் கட்டமைத்துள்ள ஒடுக்குமுறை பயங்கரவாதம் ஆபத்தாகவே உள்ளன.   அடுத்த சில வாரங்களில் பிஜேபியை தூக்கி எறிவதற்கான வாய்ப்பு வர போகிறது.

 

அதற்கு பின் வரக்கூடிய புதிய ஆட்சியும் இதே கொள்கைகளைத் தான் கடைபிடிக்கும். எனவே சிலரிடம் மட்டுமான சொத்து குவியலை தடுக்க வேண்டும். அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க நாம் அனைவரும் போராட வேண்டும். சமநீதி, சம உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார். 

 

இந்த மாநாட்டில் கௌரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள தோழர் பாலன் ம.க.இ.க மாநிலச் செயலர் தோழர் மருதய்யன், தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷா நவாஸ் ஆகியோரும் பேசினார். 

 

இறுதியாக நடைபெற்ற மக்கள் பாடகர் கோவன் பாடல் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்மறக்க செய்தது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.