Skip to main content

“ஸ்டாலினுக்கு அந்த அதிகாரம் கிடையாது” - அண்ணாமலை

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

BJP Annamalai Speech about temple open

 

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துவருவதால், ஞாயிற்றுக்கிழமையில் மெரினாவிற்குத் தடை, ஊட்டி உட்பட குறிப்பிட்ட சில பிரபல சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. அதில் ஒன்றாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் அனைத்து தினங்களிலும் அதாவது தமிழ்நாடு அரசு தடை விதித்திருக்கும் வார இறுதி நாட்களிலும், பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (07.10.2021) தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

இதில், சென்னை பாரீஸில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “நமது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சட்டம் என்ன சொல்கிறது என்றால், அந்தந்த கோயில்களில் உள்ள அறங்காவலர்கள்தான் அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர, புனித ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கும் ஸ்டாலினுக்கு அந்த அதிகாரம் கிடையாது. தமிழ்நாடு பாஜக முறையாக தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்துள்ளது, நீங்கள் செய்வது சட்டத்திற்கு எதிரானது. சட்டத்திற்கு மட்டுமல்ல எல்லா தர்மத்திற்கும் எதிரானது என்று. சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கூட பாஜக செல்லவிருக்கிறது” என்று பேசினார். 

 

இந்நிலையில், இன்று அண்ணாமலை மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அப்போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.