ADVERTISEMENT

ஓபிஎஸ், இபிஎஸ்க்கு பாஜக அண்ணாமலை அழைப்பு!

08:50 PM Jul 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க.,காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹா நேற்று தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌதி முர்மு நாளை தமிழகம் வர இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே டெல்லி சென்ற ஓபிஎஸிடம் திரௌபதி முர்மு தனது ஆதரவைக் கோரியிருந்த நிலையில், அவரது வேட்புமனு தாக்கல் நிகழ்விலும் ஓபிஎஸ் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT