Skip to main content

"கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்காது"- டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி!

Published on 21/02/2021 | Edited on 21/02/2021

 

BJP ALLIANCE PARTIES DR.KRISHNASAMY PRESSMEET IN MADURAI

 

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, "தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒரு பகுதியான பெயர் மாற்ற திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆறு உட்பிரிவுகளைச் சேர்ந்த வகுப்பினரை 'தேவேந்திரகுல வேளாளர்' என்ற பெயரில் அழைப்பதோடு, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பட்டியல் பிரிவில் இடம் பெற்றதால் சமூக ஒடுக்கல்களுக்கு ஆளாகினோம்..
 

புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை என்பது பெயர் மாற்றம் மட்டுமல்ல; பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும்தான். ஆனால், மத்திய அரசு பெயர் மாற்றத்தை மட்டும் நிறைவேற்றியுள்ளது. பெயர் மாற்ற மசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியல் பிரிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மத்திய அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள். தமிழக அரசு வெறும் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது. பெயர் மாற்றத்தை, நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை இடிந்த சுவருக்கு வர்ணம் பூசுவது போன்ற நடவடிக்கை. பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்பது எங்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை, பட்டியல் பிரிவில் இருந்து எங்களை நீக்கவில்லை எனில் சமத்துவத்தை விரும்பாதவர்கள் என்று தான் அர்த்தம்.
 

பட்டியல் பிரிவு வெளியேற்றம் அறிவிப்பு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும். பட்டியல் பிரிவில் இருப்பதால் அரசுப் பணி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் வெளியேறவில்லை; மாறாக சுயமரியாதைக்காகத் தான் வெளியேறுகிறோம். எந்த அரசியல் கட்சி மீதும் தனிப்பட்ட அனுசரணையாக நான் இருக்க மாட்டேன். ஒத்த கருத்து இருக்கக் கூடிய கட்சியோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால்தான் நாங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்தோம். பட்டியல் பிரிவு வெளியேற்றம் நிறைவேற்றவில்லை எனில் தேர்தலில் பிரதிபலிக்கும். திராவிடக் கட்சிகள் சமத்துவத்தை விரும்பவில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

 

சமுதாய மாற்றம் சமூக உயர்வு குறித்து கண்டுகொள்ளவில்லை; எல்லாம் வாக்குகளாகத் தான் திராவிடக்  கட்சிகள் பார்க்கிறது. வரும் பிப்ரவரி 25- ஆம் தேதி கோவை வரும் பிரதமரைச் சந்தித்து, எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றம் குறித்து கோரிக்கை விடுப்பேன். பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்ற பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் பா.ஜ.க. கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் கிடைக்காது. மத்திய அரசின் பெயர் மாற்றம் அறிவிப்பு என்பதே தினசரிகளில் பாராட்டு விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும். குடியுரிமைச் சட்டத்தை எளிதாக நிறைவேற்றிய மத்திய அரசு எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றத்தைச் செயல்படுத்த மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.