தேனி மாவட்டம், சின்னமனூரில் பா.ஜ.க. நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளரான பிரபாகரன் என்பவர் தனது காரை தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், காலையில் சென்று பார்த்த போது கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.