Skip to main content

யாருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி! ரேஸில் முந்தும் எச்.ராஜா

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

 தமிழக பாஜக தலைமை பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை பிடிக்க கட்சிக்குள் 6,7 பேர் கடும் போட்டியில் உள்ளனர். குறிப்பாக எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. இதில் பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எச்.ராஜாவுக்கும்தான் டஃப் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் 4 பேருமே சீனியர்கள், 4 பேருமே சர்ச்சையை கிளப்புபவர்கள். 4 பேருமே பாஜக தலைமைக்கு நெருக்கடியை தருபவர்கள் என்பதாலேயே இவர்கள் 4 பேரின் பெயர்களும் அடிப்படுகிறது. 

 

ஃப்

 

 

சிபி ராதாகிருஷ்ணன், வானதியை பொறுத்தவரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். கொங்குவின் வாக்குகளை மொத்தமாகவே அள்ளும் அளவுக்கு அந்த பகுதிகளில் வலிமையானவர்கள். அதனால் கொங்கு என்பதை மனதில் வைத்து பாஜக தலைமை யோசித்தால், சிபி ராதாகிருஷ்ணனுக்கும், வானதிக்கும் ஒரே மாதிரியான முடிவைதான் எடுத்து வைக்கும்.

 

எச்.ராஜா
ஆனால் ஏற்கனவே தமிழக பாஜகவுக்கு ஒரு பெண் தலைவராகி விட்டதால், அடுத்து ஒரு பெண்ணை பாஜக தலைவராக்குமா என்பது சந்தேகம்தான். எனவே வாய்ப்பு சிபிஆருக்கு நிறைய உள்ளது. அதேபோல, எச்.ராஜாவை பொறுத்தவரை, தேசிய அளவில் பொறுப்பை வகித்தாலும், இதுவரை மாநில தலைவர் ஆனது இல்லை.

 

திமுக
போன முறை தமிழிசை தலைவராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் எச்.ராஜாவும் அப்போது போட்டியில் இருந்தார். எனவே இந்த முறை தலைவர் பதவியை கைப்பற்றி விட அவர் முனைப்பு காட்டி வருகிறார்.  இவர் பாஜக தலைவரானால், திமுகவை எளிதாக சமாளிப்பார், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை இவர் திறமையாக சமாளிப்பார் என்று நம்பப்படுகிறது.

 

இந்துத்துவா
அதனால், சாதிய ரீதியாக, அதாவது கொங்கு வாக்குகளை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தால், சிபிஆர் பெயரே முன்னிறுத்தப்படும். இந்துத்துவா அடிப்படையில் என்று முடிவெடுத்தால் எச்.ராஜா பெயர் முன்னிறுத்தப்படும். இதுதான் பாஜக தலைமையின் இப்போதைய கருத்துணர்வாக தெரிகிறது. அந்த வகையில் எச்.ராஜா ரேஸில் கொஞ்சம் முந்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்குப் போவார்கள்” - எச்.ராஜா

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Within 80 days at least half of the ministry from DMK will go to jail says H. Raja

தமிழகத்தில், பா.ஜ., கட்சி மீது, போலீசாரைக் கொண்டு, தி.மு.க., திட்டமிட்ட பழி வாங்கும் போக்கை கடைபிடிக்கிறது. அரசியல் ரீதியாக ஹிந்து விரோத அரசாகத் தான் செயல்படுகின்றனர் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையைக் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும். தேசிய கட்சியான பா.ஜ.,வுக்கு கூட்டணி பற்றி ஒரு வழிமுறை உள்ளது. அகில இந்திய தலைமை தான், அதை பற்றி முடிவு செய்யும்.   இந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? அந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? என்றெல்லாம் கேட்டு, அதற்கு நான் ஏதாவது சொல்லி, அது வைரலாக்க வேண்டாம்.   அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் நிலைப்பாடு எடுத்து, கருத்து சொல்லும் போது தான், சரியா, தவறா என்று அதைப் பற்றி சொல்ல முடியும்.

என்னுடைய கணிப்பு, வரும் 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள். அப்போது, அவர் சொல்லும் கருத்தை வைத்து, பேசிக் கொள்ளலாம்.   அரசியலை பொருத்தவரை, இவருக்கு ஓட்டுப் போடுங்கள், என்று எப்படி மறைமுகமாக சொல்ல முடியும்; அப்படி சொல்ல முடியாது.   புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம் தானே மம்தா பேனர்ஜி. அதில் உள்ள முக்கிய புள்ளி, காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது, என்று சொல்லி இருக்கிறார். லோக்சபா தேர்தலில், பா.ஜ.கட்சி 400 ப்ளஸ் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெரும்.   ஒன்பது முறை முதல்வரான நிதிஷ்குமார், பெரும்பாலான காலகட்டத்தில், லல்லுவின் ‘ஜங்கல் ராஜ்’க்கு எதிராகத் தான் அரசியல் செய்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியினரிடம் சோதனை நடத்தியதில், துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறுகின்றனர். இது ஆபத்தான விஷயம். அதனால், அது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கு எதிராக பயன்படுத்த ஆயுதம் சேகரித்தனர், என்று தெரிய வேண்டியது அவசியம். சட்ட விரோத நடவடிக்கை எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ., சோதனை நடத்தாது.

தமிழக அரசியலில் வளரும் சக்தி பா.ஜ.கட்சி மட்டுமே. எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஊழலும், உளறலும் மிகுந்திருப்பதால், தி.மு.க., அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.   வரும் லோக்சபா தேர்தலில், கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மக்களை திரட்டுவதற்கு, பா.ஜ.கட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அரசியலில் பல்வேறு விதமான கணக்குகள் இருக்கிறது. தே.மு.தி.க.,வை பொருத்தவரை, அ.தி.மு.க., பக்கம் போனதாக உறுதியான தகவல் வரவில்லை.   அரசியலமைப்பு சட்டப்படி, மாநிலங்களில் கவர்னர் பதவி இருக்கும். முடிவு எடுக்கும் இடத்தில் இல்லாத விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில், சமீப காலமாக போதைப் பொருட்கள் அதிகம் புழக்கத்துக்கு காரணம், நம் நாட்டுக்கு வெளியே பயங்கரவாத அமைப்புகளை கட்டமைக்க விரும்புவதாக செய்தி வந்துள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் போதை பொருட்கள் பிடிபடுகின்றன. அதற்கு, தேச விரோத நடவடிக்கைகள் கட்டமைப்படுவதே காரணம். நாம் தமிழர் மீதான நடவடிக்கை கூட அது தொடர்பானது தான்” இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Next Story

“தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஹெச் ராஜா 

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
 H Raja questioned Tamil police, why have we not taken any action against Tamil party members yet

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் நேற்று (02-02-24) சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றிருந்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பா.ஜ.க பிரமுகர் ஹெச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் NIA வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? நா.த.க நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும். தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.