Skip to main content

"இது கொஞ்சம் கடினமான துறைதான், ஆனால் தற்போதுள்ள அமைச்சர் அனுபவசாலி” - அமைச்சர் புகழாரம்!!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

"This is a bit of a difficult field, but the current minister is experienced" - Minister praise

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உணவு மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நஜூமைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து தலைமையேற்றுப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “கலைஞர் ஆட்சிக் காலத்தில் இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை இத்துறையின் மூலம் தமிழக மக்களுக்கு வழங்கியிருந்தோம். இந்தத் துறையில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒருவர் அமைச்சராக நீடிக்காத நிலை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. ஏனென்றால், பொதுமக்களின் உணவுப் பற்றாக்குறையை சரி செய்வதற்கான கடமையும் அதிகம் இருந்தது. இது கொஞ்சம் கடினமான துறைதான் என்பதால் பலர் இத்துறையில் தொடர்ந்து நீடிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது பொறுப்பேற்றிருக்க கூடிய அமைச்சர் மிகுந்த அனுபவசாலியானவர். தற்போது அவர் சிறப்பாக இந்த உணவுத் துறையை வழிநடத்திவருகிறார்.

 

1996க்குப் பிறகுதான் அனைத்து குடும்ப அட்டைகளும் கம்ப்யூட்டர் அட்டைகளாக இணையதளம் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது இந்தத் துறை இணைய வழிகளோடு இணைக்கப்பட்டு பலமடங்கு மேம்பாடு அடைந்துள்ளது. தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்களில் 1,500 சங்கங்கள் மட்டுமே தன்னிறைவு அடைந்துள்ளன. பொது மக்களுக்கான மிக முக்கியத் துறையான இந்த உணவுப் பொருள் வழங்கல் துறை என்பது ஒவ்வொரு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடியது. எனவே அவற்றை சரியாக செய்யவும் அரசிடமிருந்து அவற்றைப் பெற்று முறையாக தொடர்ந்து கொடுக்க வேண்டிய கடமை அதிகாரிகளின் கையில் உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடையாமல் இருக்க கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிக அளவில் கடினப்பட்டு அதைப் பாதுகாத்துவந்த நிலை மாறி, இன்று ஜெர்மன் டெக்னாலஜியைக் கொண்டு உணவுப் பொருட்களைப் பாதுகாக்க முயற்சி செய்து தமிழகம் நல்ல முன்னேற்றப் பாதையில் வளர்ந்துவருகிறது.

 

எனவே உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல், மழையில் நனையாமல், சேதமடையாமல் பொதுமக்களுக்கும் சரியான முறையில் பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் கொண்டு சேர்க்க தற்போதைய புதிய தொழில்நுட்பமுறை கைகொடுக்கிறது” என்றும் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்டம் வாரியாக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் இதுவரை விநியோகிக்கப்பட்டிருக்கக்கூடிய மளிகைப் பொருட்கள், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு குறித்தும் இருப்பு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.