Skip to main content

அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்த நாள்; மனைவி மகள் தங்கத் தேர் இழுத்து வழிபாடு 

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Birthday of Minister I. Periyasamy; Wife and daughter pull a golden chariot and worship

 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்த நாள் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சரை மாவட்ட எல்லையான அம்மைய நாயக்கனார் பிரிவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள் ஐ.பெரியசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

 

அதைத் தொடர்ந்து திண்டுக்கல் வரை வழிநடுக்களும் தொகுதி மக்களும் கட்சி பொறுப்பாளர்களும் மாலை, சால்வைகளை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகைக்கு வந்த அமைச்சருக்கு மாவட்ட அளவில் உள்ள ஆயிரக்கணக்கான கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் மாலை சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Birthday of Minister I. Periyasamy; Wife and daughter pull a golden chariot and worship

 

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனைவி சுசிலா பெரியாமி மற்றும் அவரது மகளும், தொழிலதிபருமான இந்திரா துவாரகநாதன் கலந்துகொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்த இருவருக்கும் கோவில் கமிட்டியார்கள் சிறப்பு வரவேற்பு கொடுத்ததோடு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதன் பின்னர் கோவில் குருக்கள் இருவரையும் தங்கத்தேர் இழுக்கும் பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு தீப ஆராதனை காண்பித்த பின்பு தங்கத்தேரை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

Birthday of Minister I. Periyasamy; Wife and daughter pull a golden chariot and worship

 

இதில் சுசிலா பெரியசாமி - அவரது மகள் இந்திரா துவாரகநாதன் ஆகியோர் தங்கதேர் இழுத்தபடி கோவிலை வளம் வந்தனர். அதன்பின்னர் பொதுமக்களுக்கு ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபாஷ் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் அன்ன தானமும் வழங்கினார்கள். துணை மேயர் ராஜப்பா மற்றும் இளைஞரணி மாணவரணி சார்பாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்களும் அன்னதானமும் வழங்கினார்கள். இதில் கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன் உள்பட இளைஞரணி, மாணவரணியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்