Skip to main content

1 கோடியை திருடியவர்கள் சிறையில் கொடுத்த பிறந்தநாள் டிரீட் !

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சமீபத்தில் சிறையில் கைதிகள் அனைவரும் சிறையில் உள்ள அதிகாரிகளை சரிகட்டி அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து சொகுசு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று புகைப்படங்களுடன் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. 



திருச்சி சிறையில் ஏற்கனவே ரவுடி பட்டரை சுரேஷ் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு சர்ச்சை ஏற்படுத்தியது. ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி கொண்டாடியதாலே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் திருச்சியில் வழிப்பறி கொள்ளையர்கள் சிலர் கைதாகி சிறை சென்றவர்கள் சிறையில்  வெகு விமர்சையாக பிறந்தநாள் கொண்டாடி இருப்பது தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

prison


சென்னையை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான ஏவிஎம் பைனான்ஸ் தமிழகம் முழுவதும் கிளை நிறுவனங்கள் வைத்திருக்கிறார். திருச்சியில் ஒருவருக்கு பைனான்ஸ் கொடுப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் மதியழகன் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் 1 கோடி பணத்துடன் அக்டோபர் 27ம் தேதி திருச்சிக்கு வந்தனர். பாலக்கரையை நோக்கி செல்வதற்குள் காரில் வந்த நபர்கள் பைனானஸ் ஊழியர்களை தாக்கி பணத்தை பறித்து சென்றனர். 
 

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பாக விசாரிக்கையில். நவம்பர் மாதம் 5ம் தேதி தனிப்படை போலீசார், அப்துல் ஸ்மாயில் முகமது ரபீக், ஜாகீர் உசேன், முகமது சமீர், சாகுல்,ஹமீது ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 



இந்நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழிப்பறி திருடர்களில் ஒருவரின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சிறைக் கைதிகள் அனைவருக்கும் தங்களது சொந்த செலவில் ஐந்து பீடிகள், ஒரு கப் டீ மற்றும் இரண்டு வடை என டீரிட் கொடுத்து பிறந்தநாளை கொண்டாடி தீர்த்தனர். இதற்கு சிறையில் உள்ள முக்கிய புள்ளிகள் ஆதரவும் சிறையில் சில அதிகாரிகள் ஆதரவுடன் நடைபெற்றது என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.