Birthday celebration by cutting cake with sword; Police investigation

பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அதுதொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிடும் ரவுடிகளை போலீசார் அவ்வப்போது கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. சமீபமாக இதுபோன்ற செயல்கள் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில இடங்களில் இளைஞர்கள் இதுபோன்று பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி அச்சுறுத்தல் தரும் வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளது.

Advertisment

சென்னை சைதாப்பேட்டையில் மேளதாளத்துடன் பட்டாக்கத்தியால் இளைஞர் ஒருவர் சாலையில் கேக் வெட்டியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவர் தனதுபிறந்தநாளை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை நடு ரோட்டில்இருசக்கர வாகனங்களைக் குறுக்காக நிறுத்தி கேக் வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.