Skip to main content

தினமும் கைரேகை வைக்கும் ஆசிரியர்கள்...

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார்கள் சில ஆசிரியர்கள் பள்ளிக்கு விசிட் அடித்து விட்டு அவர்கள் நடத்தும்    தொழிலை பார்க்கப் போகிறார்கள். இதை தடுக்கும் வகையில் தான் தமிழக அரசின் கல்வித்துறை ஆசிரியர்களின் தினசரி வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவதிலிருந்து கை ரேகை வைக்கும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டது.

biometric for teachers



தமிழகத்தில் ஆசிரியர்கள் வருகையை அதிகாரிகள் உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் தற்போதைய கல்வியாண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடுநிலைப்பள்ளிகளில் நேற்று 3.10.19 முதல் அமுல்படுத்தப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 270 மாநகராட்சி, நகராட்சி நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு ஏற்கனவே பயோ மெட்ரிக்  இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவை தயார் நிலையில் இருந்தது. இன்று முதல் பயோ மெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. இதன் அடுத்த கட்டமாக விரைவில் துவக்க பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இது பற்றி  ஈரோடு  மாவட்ட கல்வி அதிகாரி முத்து கிருஷ்ணன் கூறுகையில் "ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி என அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளில் இன்று முதல் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இனி வருகை பதிவேட்டிற்கு மாறாக பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இவர்களின் வருகையை தலைமை அதிகாரிகள் கண்காணிப்பர் என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.