Skip to main content

கோடிக்கணக்கில் செலவு செய்த கண்மாய்கள் உடைப்பு!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

 

man

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து  சீர் அமைக்கப்பட்ட கண்மாய்கள் சில மாதங்களிலேயே உடைந்தது. 


      
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் இருக்கும் போது பணித்துறை சார்பில் நீர்வளம் மற்றும் நிலவளத்திட்டத்தின் கீழ் நான்கு கோடி மதிப்பீட்டில் அப்பகுதிகளில் உள்ள கொங்கர்குளம்மற்றும் சிலுக்குவார்பட்டி, கீழ்குளம், பாப்பன் குளம்   ஆகிய கண்மாயிகள் சீர் அமைக்கப்பட்டு பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது. இத் திட்டத்தின் கீழ் கண்மாய் கரைகள் பலபடுத்துதல், மடைகள் சீர் அமைப்பு, தூர் வாருதல் போன்ற பணிகள் முக்கியமானவை என்பதால் பொதுப்பணித்துறையின் மேற் பார்வையில் புதுக்கோட்டையை சேர்ந்த காண்ட்ராக்ட்டர் பாலு தலைமையில் பணிகள் செய்தனர்.


        இந்த நிலையில் தான் கடந்த  ஒருவாரமாகவே விட்டு விட்டு பெய்து வரும்  சிறு மழைக்கே கண்மாய்கரை படகுகளில் உள்ள சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கண்மாய் உடைந்து விட்டது.


     இதை கண்டு   அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த  சில விவசாயிகள் பொதுப்பணித்துறையின் காதுக்கு கொண்டு போனபோது...இது எங்கள் பணி இல்லை மதுரை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள் என கூறி கையை விரித்து விட்டனர்.  அதை தொடர்ந்து விவசாயிகளும் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறையினருக்கு தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.  இந்த நிலையில் நேற்று  அப்பகுதியில் 12 செ.மீட்டர் மழை பெய்ததின் மூலம்  அப்பகுதியில் இருந்து கண்மாயிகளுக்கு தண்ணீர் வரத்து வந்தும் கூட அங்கங்கே கரைகள் அரிப்பு ஏற்பட்டு உடைந்து  இருப்பதால் தண்ணீரும் வீணாகி விட்டது.   இந்த நிலை தொடர்ந்து நீடித்தால்  வரக்கூடிய பெரும்  மழைக்காலங்களில் கண்மாயிகளில் பெரும் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வந்து விடும் அதற்குள் அதிகாரிகள் கரையை சீர் அமைக்க முன் வர வேண்டும்.


  

சார்ந்த செய்திகள்

Next Story

கணவன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த மனைவி

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

The man who cheated on many women has been arrested

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கிழுமத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மகன் பால்ராஜ்(30). இவருக்கு திருமணமாகி  பூவழகி(22) என்ற மனைவி உள்ளார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி தனது கணவர் பால்ராசு மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி எனக்கும் பால்ராசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனது பெற்றோர் பால்ராசுக்கு 3 பவுன் செயின் இரண்டரை பவுன் மோதிரம் என ஐந்தரை பவுன் சீர்வரிசை செய்தனர். மேலும் அவருக்கு பத்து பவுன் நகையும் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் தருவதாக தெரிவித்து இருந்தனர்.

 

இந்த நிலையில் திருமணம் ஆனதிலிருந்து எனது கணவர் செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோக்களை பார்த்தேன். இதுகுறித்து அவரிடம் இந்தப் பெண்கள் யார் என்று கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நகை, பணத்திற்காக பல பெண்களிடம் என் பெயரை மாற்றி சொல்லி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களோடு குடும்பம் நடத்தி வருகிறேன். இதையெல்லாம் நீ கண்டு கொள்ளக்கூடாது உன்னை நான் நல்ல முறையில் வைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். திருமணம் நடந்த இரண்டு மாதங்கள் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய நிலையில் திடீரென ஒருநாள் என் பெற்றோர் வீட்டில் என்னை கொண்டு வந்து விட்டு விட்டு சென்றார். பின்னர் எனது பெற்றோரிடம் உங்கள் மகள் என்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால் வரதட்சணையாக மூன்று லட்சம் பணம், பத்து பவுன் நகையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொண்டு எனக்கு தகவல் கொடுங்கள் என கூறினார்.

 

அதன் பின்னர் உங்கள் மகளை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார. அதன்பிறகு அவரது செல்போன் எண்களுக்கு போன் செய்யும் போதெல்லாம் சென்னையில் வேலை பார்க்கிறேன் பணத்தையும், நகையையும் வரதட்சணையாக கொடுப்பதாக இருந்தால் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று பதில்கூறி வந்தார். இந்த நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டு போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் என்னிடம் உனது கணவர் ஏற்கனவே மைனர் பெண் ஒருவருடன் திருமணம் செய்வதாக கூறி தகாத உறவு வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தேடிக் கொண்டிருப்பதாக  தெரிவித்தனர். இதையடுத்து சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பால்ராசுவுடன் எனக்கு திருமணமாகி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார்.

 

இப்படி நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையோடு விளையாடி மோசடி செய்ததோடு என்னுடைய வாழ்க்கையும் சீரழித்து விட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பூவழகி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராசுவை தேடிவந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சென்னை சென்று பால்ராசை நேற்று (25.12.2021) கைது செய்து பெரம்பலூர் கொண்டு வந்துள்ளனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அவர்களிடம் எவ்வளவு நகை பணம் பறித்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை பணம் பறித்த பால்ராஜ் குறித்த செய்தி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

Next Story

ஆன்லைனில் ரம்மி விளையாடி கடன் நெருக்கடியால் வாலிபர் தற்கொலை!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

Young man commits incident due to debt crisis by playing rummy online!

விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (27 வயது). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு  வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (19/08/2021) பச்சையப்பன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர், அன்று இரவு தனது அறைக்குள் சென்று அவரது மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கணவர் தற்கொலை செய்துக் கொண்டது அவரது மனைவி தெரியவே, அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவலறிந்த பச்சையப்பனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரின் உடலைப் பார்த்துகதறி அழுதனர். இது குறித்து, வளவனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பச்சையப்பன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பச்சையப்பன் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் நிறைய கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார். கடன் கொடுத்த நண்பர்கள் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

 

இதனால் மனமுடைந்து போன பச்சையப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ரம்மி விளையாட்டில் கடனாளியாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வளவனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.